tamilnadu

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி: திருமாவளவன்

சென்னை, டிச. 31 - ஒமிக்ரான் தொற்றுப் பரவலைக் கருத்தில்  கொண்டு 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவைச் வலியுறுத்தினார். “கோவிட்-19 இறப்புகளில் சுமார் 88 சதவிகிதம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு நிகழ்கின்றன. எனவே, எம்ஆர்என்ஏ தடுப்பூசியை ‘பூஸ்டர் டோஸாக’ வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.