tamilnadu

img

இரும்பு ஆலையை விற்கத் துடிக்கும் மோடி அரசைக் கண்டித்து முற்றுகை

விசாகப்பட்டினம், நவ.14- ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப் பட்டினம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்குவதை கைவிட வலி யுறுத்திப் போராடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் விசாகப்பட்டினம் இரும்பு ஆலை  வாசலை முற்றுகையிடச் சென்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  உள்ளிட்ட போராட்ட கூட்டுக்குழு வினரை காவல்துறை பலவந்தமாக கைது செய்தது. முன்னதாக ஐதராபாத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விசாகப்பட்டினத்தில் உருக்கு ஆலை யை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். மாநிலத்தை பிரித்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.