tamilnadu

img

25 ஆவது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை,  பிப்.2- விசைத்தறி உரிமையாளர்கள் 25 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புதனன்று விசைத்த றிக் கூடங்களில் கருப்புக் கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் இரண்டு லட்சத்திற்கும் மேற் பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. விசைத்தறி உரிமையா ளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்க ளிடம் இருந்து நூலை வாங்கி கூலி அடிப்படையில் துணியாக நெசவு செய்து தருகின்றனர். இதற்காக 3 வருடங்களுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு காணப்படும். ஆனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமை யாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுக ளாக கூலியை உயர்த்தி வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.  இதனை யடுத்து கூலி உயர்வு வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அமைச்சர்கள்  கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத் தறி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சோமனூர் ரகத்திற்கு 23 சத வீதமும், பல்லடம் மற்றும் இதர ரகங்களுக்கு 20 சதவீதமும்  கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் காணப்பட்டது. மேலும், இந்த கூலி உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காததால் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் விசைத் தறி உரிமையாளர்கள் விசைத்த றிக் கூடங்களை நிறுத்தி காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் பிப்ரவரி 2 புதனன்று 25 ஆவது நாளை எட்டியது. இதனால் இதனை நம்பி உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். முன்னதாக, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும்  இடையே தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.  இந்நிலையில் கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தி யாளர்களுக்கு கண்டனம் தெரிவிக் கும் வகையில், விசைத்தறி உரிமை யாளர்கள் புதனன்று விசைத்தறிக் கூடங்களிலும், வீடுகளிலும்  கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி கூறுகையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்காததால் 25 நாட்களாக கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஜவுளி உற்பத்தியா ளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களி லும் விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போரா ட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1.25 கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 60 கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது என்றார்.

குதிரையுடன் பிரச்சாரம்

இதற்கிடையே, அவிநாசியை அடுத்த தெக்கலூர் பகுதி முழுவதும்  உள்ள விசைத்தறி கூடங்கள், வீடுகள், தொழிலாளர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் விசைத்தறி யாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதன்பின் குதிரை மீது விசைத்தறியாளர்கள் அமர்ந்து வீதிவீதியாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கமிட்டு நூதனமான முறையில் தங்க ளது போராட்டத்திற்கு ஆதரவை திரட்டி வருகின்றனர்.