அசைவ உணவு உண்டதற்காக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்களைக் கண்டித்தும் அவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ப்ரிடம் ஸ்பீக்கர்ஸ் ஸ்டூடண்ட் கம்யூனிட்டி மற்றும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் கோ.அரவிந்தசாமி கிளை நிர்வாகிகள் பிரனாவ், அனந்த கிருஷ்ணன், ஜகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.