tamilnadu

img

கேரளாவில் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் பாஜக ஆளும் குஜராத், ம.பியில் மிகக் குறைவு

மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஆண் விவசாயத் தொழிலாளிக்கு  229.20 ரூபாயும்  குஜராத்தில் 241.90 ரூபாயும் மட்டுமே தினசரி ஊதியமாக தரப்படுகிறது. இது தேசிய சராசரி ஊதியமாக உள்ள   345.70 ரூபாயை விட மிகக்  குறைவான ஊதியமாகும். 

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொழி லாளர்களுக்கு  மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலங்களாகவும் இடதுசாரிகள் ஆளும் கேரளா தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் மாநிலமாகவும் உள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியின்  2022-23 நிதியாண்டிற்கான சமீபத்திய அறிக்கை இதை காட்டுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஆண் விவசாயத் தொழிலாளிக்கு  229.20 ரூபாயும்  குஜராத்தில் 241.90 ரூபாயும் மட்டுமே தினசரி ஊதியமாக தரப்படுகிறது. இது தேசிய சராசரி ஊதியமாக உள்ள   345.70 ரூபாயை விட மிகக்  குறை வான ஊதியமாகும். வாரம் ஒரு நாள் விடு முறை தவிர்த்து ஒரு மாதத்தில்  25 வேலை நாட்களுக்கு ஒரு  தொழிலாளி  ம.பி.யில் வெறும் 5,730 ரூபாயும் குஜராத்தில் 6,047  ரூபாயும் மட்டுமே ஊதியமாகப் பெற முடிகிறது. ஆனால் இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் ஒரு தொழி லாளி  19,107 ரூபாய் மாத ஊதியமாகப் பெறு கிறார். கிரிசில் என்ற நிறுவனத்தின் தகவல்படி, 2023  செப்டம்பர் மாதத்தில்  ஒரு தட்டு சைவ உண விற்கு  நாளொன்றுக்கு  27.90 ரூபாய்  அல்லது மாதத்திற்கு  8,400  ரூபாய் மற்றும் அசைவ உணவிற்கு நாளொன்றுக்கு ரூ.61.40 என உள்ளது. ஐந்து பேர் கொண்ட விவசாயத் தொழிலாளியின் குடும்பம் சைவ உணவில் நீடித்தாலே இந்த அளவீடுகள் படி குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய  மாநிலங்களில் மக்கள் பட்டினியில் வாழும் சூழலே இருக்கும். இதற்கு நேர்மாறாக, தேசிய சராசரியை விட அதிகமாகவும், இந்தியாவிலேயே மிக அதிக மாகவும், இடதுசாரிகள் தலைமையிலான கேரள அரசு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 764.3 அல்லது ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு ரூ. 19,107 என்ற அதிகபட்ச  ஊதியத்தை வழங்குகிறது. இது 25 லட்சம் புலம்பெயர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்களை ஈர்க்கக் காரணமாகவும் உள்ளது.

2021-22 ஆம் ஆண்டில்  விவசாயத் தொழிலாளர்களுக்கு தினசரி  சராசரி ஊதியமாக  உத்தரப் பிரதேசம் - ரூ. 309.30; ஒடிசா - ரூ. 285.10; மகாராஷ்டிரா (அதிக தொழில்மயமான மாநிலம்) - ரூ 303.50   என  மோசமான  ஊதி யம்  வழங்கின.இதே நேரத்தில் ஜம்மு & காஷ்மீர் - ரூ. 550.40, இமாச்சலப் பிரதேசம் - ரூ. 473.30, தமிழ்நாடு - ரூ. 470 என ஒப்பீட்டளவில் அதிக ஊதியம்  அளித்துள்ளன. விவசாயம் அல்லாத தொழிலாளர்களைப் பொறுத்தவரை, மிகக் குறைந்த ஊதியமாக நாளொன்றுக்கு சராசரியாக  மத்தியப் பிரதேசத்தில் ரூ. 246.3, குஜராத் - ரூ.273.1, திரிபுரா - 280 ரூபாய் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தேசிய சராசரி ஊதியமாக உள்ள  ரூ.348க்கும் குறைவானது. இதே வேளையில்  2022-23 நிதியாண்டில்  ஒரு நாளைக்கு  விவசாயம் அல்லாத தொழி லாளர்களுக்கு  கேரளாவில்  - ரூ. 696.60, ஜம்மு  & காஷ்மீர் - ரூ. 517.90,தமிழ்நாடு - ரூ 481.50,  ஹரியானா -ரூ.451 என அதிகமாக வழங்கப் பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு

இதே 2022-23 நிதியாண்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில்  தேசிய சராசரி ஊதியமான ரூ.393.30 க்கும் குறைவாக கொடுக்கப்படுகிறது. குஜராத்தில் கிராமப்புற கட்டுமானத் தொழி லாளர்களுக்கு  நாளொன்றுக்கு  சராசரி ஊதியம்  வெறும்  323.20 ரூபாய் மட்டுமே, இதுவே மத்தியப் பிரதேசத்தில்  278.70 ரூபாயும்  திரிபுராவில் 286.10 ரூபாயுமே வழங்கப்படுகிறது.  இதே நேரத்தில் இந்தியாவிலேயே கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக  கேரளாவில்  852.50 ரூபாயும் , ஜம்மு & காஷ்மீர் இல் 534.50 ரூபாயும்,  தமிழ்நாட்டில் 500.90 ரூபா யும், இமாச்சல பிரதேசத்தில் 498.30 ரூபாயும் என நாளொன்றுக்கு சராசரி ஊதியம்  வழங்கப்படு கிறது.  2022-23  ஆண்டில் இந்தியாவின் கிராமப்புறத்தில் உண்மையான ஊதிய அதிகரிப்பு விவசாயத் தொழிலாளர்களுக்கு  சராசரியாக 5.8 சதவீதமாகவும், விவசாயம் அல்லாத தொழி லாளர்களுக்கு  4.9 சதவீதமாகவும்  தேக்க மடைந்துள்ளது.

- ஜே.எஸ்.மஜூம்தார்
தகவல்கள்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவ.24)