2026 தேர்தலில் பாஜகவும் கூட்டணி கட்சிகளும் தோற்கடிக்கப்படுவது உறுதி
அமித் ஷாவின் சகுனி வேலை தமிழகத்தில் எடுபடாது!
சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேச்சு
சென்னை, ஜூன் 21- தமிழ்நாடும் கேரளமும் முற்போக்கு எண்ணம் கொண்ட மாநிலங்கள் என்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வும் அதிமுக உள்ளிட்ட அதன் கூட்ட ணிக் கட்சிகளும் நிச்சயம் தோற் கடிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி கூறினார். தமிழ்நாடு முழுவதும் ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய கிளர்ச்சிப் பிரச்சார இயக்கத்தின் நிறைவாக, சென்னை அம்பத்தூரில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் எம்.ஏ. பேபி ஆற்றிய உரை வருமாறு: ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மதவெறுப்பு அரசியலைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. மக்கள் நலக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழு சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 10 நாட்களாக மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்றுள்ளது. இந்த இயக்கத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். தொழிலா ளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வா தாரக் கோரிக்கைகள் இந்த பிரச்சா ரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. கொழுத்த முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசு தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்களை மக்களிடம் நமது தோழர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய மோடி அரசு உழைப்பாளி மக்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் நலன் களை பாதுகாப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று பிரதமர் மோடி பேசினாலும் அம்பானி, அதானி வளர்ச்சியில் தான் அவர் அக்கறை எடுத்துக்கொள்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய அரசின் மோச மான கொள்கைகளை அம்பலப் படுத்தியதோடு, உழைப்பாளி மக்க ளின் பிரச்சனைகளையும் நாம் ஆட்சி யாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். உழைப்பாளி மக்கள் சந்திக்கக்கூடிய உண்மை யான பிரச்சனைகளை எடுத்துரைத்து அவர்களை ஒரு இயக்கமாக அணி திரட்டும் பணியில் ஈடுபட்டோம். 3.15 லட்சம் பேர் தற்கொலை சமீபத்தில் நாடு மிக கோரமான விமான விபத்தை சந்திக்க நேரிட்டது. ஏர் இந்தியா விமான விபத்தில் மொத்தம் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ஒட்டுமொத்த நாடே மிக வும் அதிர்ச்சியடைந்தது. இந்த விபத்து மட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான கொள்கை களால் பல்வேறு கால கட்டங்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது குறித்த ஏராளமான புள்ளிவிவரங்கள் உள்ளன. படுமோசமான வாழ்வாதார பிரச்சனையால் ஆயிரக்கணக்கான தினக்கூலிகள் உயிரிழந்தனர். ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். கிட்டத்தட்ட 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி அர சின் தவறான கொள்கையால் தான், இத்தனை உயிர்களை நாம் இழந் தோம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொய்யான வாக்குறுதிகள் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது கட்சியினரும் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்க ளுக்கு பொய்யான வாக்குறுதி களை அளித்தனர்.
நமது சமூகத்தில் வேலையின்மை மிகப்பெரிய பிரச்ச னையாக உள்ளது என்பதை அனை வரும் அறிவோம். இளைஞர்களையும் பொதுமக்களையும் கவருவதற்காக மோடி, தமது அரசு ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை தரும் என்று கூறினார். தற்போது மோடி அரசு 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள் ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு மோடி அரசு வேலை கொடுத்திருந்தால் 20 கோடிப் பேருக்கு வேலை கிடைத் திருக்க வேண்டும். ஆனால் அவர் கொடுத்தது வெற்று வாக்குறுதி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பல்வேறு பிரச்சனைகளால் துயரத்தில் உள்ள ஏழை -எளிய நடுத்தர மக்களை அவர் ஏமாற்றுகிறார். இதுமட்டுமல்ல, இயற்கையாகவே ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறு வனங்களில் ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் காலியிடங்களையும் கூட மோடி அரசு நிரப்பவில்லை. 14 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை மோடி அரசின் சுமார் 14 லட்சம் காலி யிடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப் பட்டுள்ளன. இந்த இடங்களை முறையான இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பியிருந்தால் 1.25 லட்சம் இடங்கள் பழங்குடியினருக்கும் 2.4 லட்சம் இடங்கள், பட்டியல் வகுப்பினருக்கும் 3.35 லட்சம் இடங்கள் இதர பிற்பட்ட வகுப்பினருக்கும் கிடைத்திருக்கும்.
ஆனால் மோடி அரசு கடைபிடிக்கும் மோசமான கொள்கையால் இம் மக்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து காலியாகும் இடங்களை நிரப்ப மறுப்பது, மறுபுறம் இருக்கிற பணியிடங்களையும் ஒழித்துக்கட்டும் வேலையில் ஈடுபடுவது என மக்களுக்கு எதிரான கொள்கைகளை ஒன்றிய அரசு பின்பற்றி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நாசகரமான கொள்கைகளுக்கு எதிராக இளைஞர்களையும் பொது மக்களையும் அணிதிரட்ட வேண்டிய மிகப்பெரிய கடமை நமக்கு உள்ளது. மாநிலங்களின் உரிமை பறிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு உழைப்பாளி மக்களுக்கு எதிரான கொள்கையை மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு எதிரான கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்தி வந்துள்ளது. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. பாஜக அரசாங்கத்தால், மாநில அரசின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. பாஜக அரசின் கொள்கையோடு ஒத்துப்போகாத சில மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சரக்கு மற்றும் சேவை வரியின் பெரும்பகுதி நலன்களை ஒன்றிய அரசு அனுபவிக்கிறது. அந்த வரி மாநிலங்களுக்கு- குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு - கேரள அரசுகளை பழிவாங்கும் மோடி அரசு அரசியல் சாசனத்தின்படி உருவாக்கப்பட்ட நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு உரிய பங்கு கிடைத்து வந்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆணையமும் மாநில அரசுகளும் கலந்துபேசி முடிவு செய்துவந்தன.
ஆனால் இந்த அதிகாரத்தை மோடி அரசு தவறாக பயன்படுத்தி தமக்கு பிடிக்காத மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளம் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு நியாயமான பகிர்வை மறுத்து பழிவாங்கி வருகிறது. நிதி ஒதுக்கீடு பாதியாக குறைப்பு 4-ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு 7.9 விழுக்காடு நிதியை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. தற்போது 15-ஆவது நிதி ஆணையம் தனது பணியை துவக்கியுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு 4.07 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாதியாகி விட்டது. இது திட்டமிட்டு நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கை அல்லாமல் வேறு என்ன?. 10-ஆவது நிதி ஆணையத்தின் போது, கேரளத்திற்கு 3.87 விழுக்காடு நிதி அளிக்கப்பட்டது. இன்றோ 15-ஆவது நிதி ஆணையம் அதை பாதியாக குறைத்து விட்டது. அதாவது 1.9 விழுக்காடு நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள், ஒன்றிய அரசுக்கு எதிராக கலகத்தை நடத்தவேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் கலவரக்காரர்கள் அல்ல. இந்தியா ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள். ஆனால், பாஜக - ஆர்எஸ்எஸ் அரசியல் கொள்கை வழியை பின்பற்றாத மாநில அரசுகளை வஞ்சிக்கும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையில் ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது. இத்தகைய நிலை தொடர்ந்தால் மிக மோசமான விளைவுகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும். கீழடி அறிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? இதுமட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் மீது திட்டமிட்டு ஒன்றிய அரசு இந்தி மொழியை திணித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளது. கீழடி தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கையை ஏற்க மறுப்பது ஒன்றிய அரசின் மோசமான நடவடிக்கைக்கு சமீபத்திய உதாரணமாகும். தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவியல்பூர்வமான சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்ட அறிக்கையை கூட ஏற்க மறுக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வைகை நதிக்கரையில் மிகவும் பழமையான நாகரீகம் இருந்திருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அந்த காலத்திலேயே இரும்பின் பயன்பாடு அங்கு உள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். 982 பக்க அறிக்கையில் ஏராளமான சான்றுகளை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையை பிரபல தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், ஒன்றிய ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாக இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், நமது பழமையான நாகரிக வரலாறு தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வேறுவிதமான கருத்து உள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் வேத காலத்தை நம்புகிறார்கள். மனு அடிப்படையிலான சமுதாயத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
எனவே தான், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளமான பழமையான நாகரீகம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அதை வேண்டுமென்றே ஏற்க மறுக்கிறார்கள். ஆரிய கலாச்சாரத்தைத் தான் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தான், கீழடி குறித்த ஆதாரங்கள் போதாது என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள். ஒன்றிய அரசின் எடுபிடிகளாக உள்ள சில போலி விஞ்ஞானிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் சர்ஜரி இருந்திருக்கிறது என்று உளறி வருகிறார்கள். யானை தலையை மனித உடம்புடன் இணைக்கும் கலையை அந்த காலத்திலேயே கற்றிருந்தனர் என்று கூறி வருகிறார்கள். ஆனால், கீழடியில் அறிவியல் பூர்வமான சான்றுகளுடன் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ள போதிலும், அதை ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தின் பெருமை இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் எகிப்திலும் பழங்கால நாகரீகம் குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் வளமான நாகரீகம் தென்னிந்தியாவில் அதுவும் தென் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதை அறிந்து, நாம் எல்லாம் பெருமைப்படுகிறோம். ஆனால், ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன. நமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இந்த பிரச்சனையை தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எழுப்பி ஆட்சியாளர்களின் தவறான கண்ணோட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசும் இந்த பிரச்சனையை மிகத் தீவிரமான பிரச்சனையாக கருதி ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இருப்பினும் மோடி - அமித் ஷா தலைமையிலான ஒன்றிய அரசு அறிவியலையே வகுப்புவாத மயமாக்கியுள்ளதால் உண்மையான சான்றுகளையும் தொல்லியல் ஆய்வுகளையும் ஏற்க மறுக்கிறது. இரண்டு மிக முக்கியமான கடமைகள் நாம் நிறைவேற்றி முடிக்கவேண்டிய இரண்டு மிகப்பெரிய உடனடி கடமைகள் உள்ளன. ஒன்று ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டியுள்ளது. நாம் அனைவரும் அனைத்து பலத்தையும் ஒன்றுதிரட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டியுள்ளது. சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் தொடர்ந்தால், தொழிலாளர்களின் நிலைமை அடிமை நிலையை நோக்கிச் சென்று விடும் என்று எச்சரித்துள்ளன. நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க உரிமைகளுக்கும் எதிரானவை.
எனவே, இந்த வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு வெகுஜன அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. முதன்மையான அரசியல் கடமை இது ஒரு உடனடிக் கடமை என்றால், மற்றொரு உடனடி கடமை அரசியல் கடமையாகும். விரைவில் பீகாரில் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பாஜக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க மகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றியை இங்கு உறுதிப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தான், ஒரு சகுனி அடிக்கடி தமிழகத்தை வட்டமடித்து வருகிறார். அவர் யார் என்பதை உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. அவர் மோடி அரசின் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர். அமித்ஷா கனவு நிறைவேறாது தமிழகம் பாஜக மாநிலமாக மாறவேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் கூறிவருகிறார். ஆனால் அமித்ஷா அவர்களே, உங்களது கனவு பலிக்காது என்பதை தமிழக மக்களாகிய நாம் உறுதிப்பட தெரிவிக்க வேண்டியுள்ளது. தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவையும் அந்தகட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் ஒன்றுபட்டு தோற்கடிப்பார்கள். மனுவாதிகளான சங்பரிவார் கூட்டணியின் தோல்வியை உறுதிப்படுத்த வேண்டிய மிக முக்கிய அரசியல் கடமை நமக்கு உள்ளது. இந்த மண் திருவள்ளுவர், மகாகவி பாரதி, பெரியார் ஆகியோரால் பண்படுத்தப்பட்ட மண்.
எனவே மதச்சார்பற்ற ஜனநாயகம் எண்ணம் கொண்ட தமிழக மக்கள் பாஜக-வின் தோல்வியை உறுதிப்படுத்துவார்கள். எனவே, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சகுனி வேலை எடுபடாது என்பதை நாம் புரிய வைக்க கடுமையாக பணியாற்ற வேண்டியுள்ளது. தமிழ்நாடும் கேரளமும் மதச்சார்பற்ற முற்போக்கு எண்ணம் கொண்ட மாநிலங்கள். எனவே, இங்கு பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு எம்.ஏ. பேபி பேசினார். அவரது ஆங்கில உரையை நரேந்திரராவ் தமிழில் மொழியாக்கம் செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்காக தலைவர் களின் உரையை மகாலட்சுமி சைகை மொழியில் விளக்கினார்.