tamilnadu

41 பேர் பலியான சம்பவத்தை வைத்து பாஜக-அதிமுக அரசியல் செய்கின்றன!

41 பேர் பலியான சம்பவத்தை வைத்து பாஜக-அதிமுக அரசியல் செய்கின்றன!

டிடிவி தினகரன் விமர்சனம் தஞ்சாவூர், அக். 4 - கரூர் சம்பவத்தில் பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறி யுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  சனிக்கிழமை (அக்.4) தஞ்சாவூரில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, கரூர் கூட்ட நெரிச லில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு விஜய் தார்மீகப்  பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். விஜய் தார்மீகப் பொறுப்பேற்றிருந்தால் நீதி மன்றம் கண்டனம் தெரிவித்திருக்காது என்று தான்  கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விபத்தை  தவெக திட்டமிட்டு ஏற்படுத்தவில்லை என்றாலும், கரூர் விபத்துக்கான தார்மீகப் பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு உண்டு என்று தினகரன் குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரமாக இதில் அரசியல் செய்யப்படு வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று  கூறிய அவர், உணர்ச்சிவசப்படும் சீமான் கூட கரூர்  விவகாரத்தில் நிதானமாகக் கையாளுகிறார் என்றும்  ஆனால், வழக்கம்போல் பதவி வெறியில் எடப்பாடி  பழனிசாமி பேசுவதாகவும், அவரது நடவடிக்கை அநாகரீகமாக உள்ளதாகவும் விமர்சித்தார். ஆளுங் கட்சிதான் காரணம் என்று அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி சாடுவது மோசமானது என்று அவர்  தெரிவித்தார். கரூர் சம்பவத்தில் பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது  என்று தினகரன் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது பாஜக குழு ஏன் வரவில்லை  என்று அவர் கேள்வி எழுப்பினார். கரூர் சம்பவத்தை  சதி என்று அண்ணாமலை கூறியது வருத்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யை மத ரீதியாக விமர்சிக்கக் கூடாது என்ற தினகரன், விஜய்யை கிறிஸ்தவராக பார்ப்பது, எச்.ராஜாவின் பார்வைக் கோளாறு என்றும், அவர் ஜோசப் விஜய்யாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும், அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அவர் கேட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் சாதி, மதம் எல்லாம் பார்ப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.