கலவர நோக்கத்துடன் பாஜகவின் ‘முருக பக்தர்கள்’ மாநாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடுக!
சிபிஎம் பிரச்சார இயக்கத்தில் பெ.சண்முகம் வேண்டுகோள்
சிபிஎம் பிரச்சார இயக்கத்தில் பெ.சண்முகம் வேண்டுகோள் சென்னை, ஜூன் 14- பாஜக நடத்தும் ‘முருக பக்தர்கள்’ மாநாட்டையொட்டி எந்தவித கலவரமும் நடைபெறமால் தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வடசென்னை மக்கள் சந்திப்பு இயக்கத்தில் அரசுக்கு பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்தார். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் 20ஆம் தேதி வரை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ‘நீதிமன்ற நிபந்தனைகளை மதிக்கமாட்டார்கள்’ அதன் ஒருபகுதியாக வடசென்னை திருவொற்றியூரில் பகுதிக்குழு உறுப்பினர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கதை தொடங்கி வைத்து மாநிலச் செயலாளர் பி.சண்முகம் பேசுகை யில், “மதுரையில் வரும் 22ஆம் தேதி ‘முருக பக்தர்கள்’ என்ற பெயரில் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார்கள். இந்த மாநாட்டிற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித் திருக்கிறது. ஆனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை எல்லாம் மதித்து நடப்பவர்கள் அல்ல. 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி சம்பந்த மாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது, பாபர் மசூதியை இடிக்கமாட்டோம் என்று பிரமான பத்திரத்தை தாக்கல் செய்தவர்கள் தான் இவர்கள்; ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மசூதியை இடித்து தரை மட்டமாக்கியவர்கள். தற்போது அந்த இடத்தில் அவர்களின் நோக்கத்தின்படி ராமர் கோயில் கட்டி யுள்ளார்கள். உச்சநீதிமன்றம் கூறினாலும், உயர் நீதிமன்றம் கூறினாலும் அவற்றை யெல்லாம் மதித்து நடக்கக் கூடிய கூட்ட மல்ல ஆர்எஸ்எஸ் - பாஜக அமைப்புகள். விழாக்களை கலவரமாக மாற்றும் கூட்டம் மத விழாக்களை, பண்டிகைகளை சிறுபான்மை மக்களுக்கு எதிராக, இஸ்லா மிய மக்களுக்கு எதிராக பயன்படுத்து வதைத் தான் பாஜகவினர் நோக்கமாக கொண்டுள்ளார்கள். வட இந்திய மாநிலங் களில் ஹோலி பண்டிகை என்பது ஒரு சிறந்த விழாவாகும். வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கிற ஒரு நல்ல நிகழ்வு. அதைக் கூட இஸ்லாமிய மக்களுக்கு எதி ராக வன்முறையை கட்டவிழ்த்து விடக் கூடிய விழாவாக மாற்றினார்கள். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கலவரங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக அரசு, ‘முருக பக்தர்கள்’ மாநாடு என்ற பெயரில் பாஜக கும்பல் நடத்தக் கூடிய இந்த மாநாட்டி னால், எந்தவிதமான அசம்பாவித சம்பவங் களும் நடைபெறாமல் நீதிமன்றத் தின் நிபந்தனைகளை கறாராக கடை பிடிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புடன் இருப்பார்கள் தமிழக மக்களும் மதுரை மாவட்ட மக்களும், மத நம்பிக்கைகளை அரசிய லுக்கு பயன்படுத்துவதை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஏற்கனவே திருத்த ணியில் இருந்து அண்ணாமலை வேல் பயணம் மேற்கொண்ட போது தமிழக மக்கள் எந்தவிதமான ஆதரவையும் வழங்க வில்லை. அதேபோல் சீமான் மேற்கொண்ட வேல் பயணத்திற்கும் மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. மதத்தை அரசியலில் கலப்பதற்கு எதிராகத்தான் தமிழக மக்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். அத்தகைய பாரம்பரியத்தை கடை பிடிக்கக் கூடிய வகையில், ‘ஆன்மிக மாநாடு’ என்ற பெயரில் நடைபெறும் அர சியல் மாநாட்டை உண்மையான முருக பக்தர்களும், தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள், மதச்சார்பற்ற கட்சிகள் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தோடு, ஒற்றுமையோடு மதுரையின் மதச்சார்பற்ற பண்புகளை, பாரம்பரியத்தை பாதுகாக்கக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் பேசினார்.