tamilnadu

img

அறிவுப் பசியை போக்கும் பாரதி புத்தகாலய வெளியீடுகள்

சென்னை, பிப். 21- சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் அறிவுப் பசியைப் போக்கும் நூல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு பதிப்பகத்தினருடைய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாரதி புத்தகாலயம் சார்பில் அரங்கம் (எப் 2, எப். 31) அமைக்கப்பட்டுள்ளது.  

16 அரிய ஆவணங்கள், 85 புத்தகங்கள், 28 பத்திரிகைகளின் தகவல்கள், ஏராளமான கட்டுரைகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஏ.ஜி.நூரானி எழுதி ஆர்.விஜயபாஸ்கர் தமிழில் மொழிபெயர்த்த 1000 பக்கங்கள் கொண்ட ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற நூல் 895 ரூபாய்க்கு கிடைக்கிறது. ராவ்சாஹேப் கஸ்கே எழுதி சுந்த ரசோழன் தமிழில் மொழிபெயர்த்த  ‘ஆர்.எஸ்.எஸ்.  ஒரு திரை விலக்கம்’, இரா.சிசுபாலன் எழுதிய ‘சாதி இடஒதுக்கீடு என்றால் என்ன’, பழ.நெடுமாறன் எழுதிய ‘சிந்து நாகரிகமும்  பழந்தமிழர் நாகரிகமும்’, ஆர்.சம்பகலக்ஷ்மி எழுதி வேட்டை எஸ்.கண்ணன் தமிழில் மொழி பெயர்த்த ‘வணிகம் கருத்தியல் நகர்மயம்’, சாலை செல்வம் எழுதிய ‘வாழ்வியலாகும் கல்வி’,  பொதுத்துறை பொது சேவைக ளுக்கான ஆணையம் வெளி யிட்டுள்ள ‘மக்களின் சேமிப்பு யார் கைகளில்’ (எல்.ஐ.சி. பங்கு விற்பனை மீதான அறிக்கை),  ஃபிரடெரிக் எங்கல்ஸ் எழுதி மு.சிவ லிங்கம் தமிழில் மொழிபெயர்த்த ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’, சிந்துஜா  எழுதிய ‘பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும்’, அ.பாக்கி யம் எழுதிய ‘சென்னையின் மறுபக்கம்’, ‘ஒரு எதிர் கேள்வியின் தத்துவம்’, போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல் ஐஜாஸ் அகமது, பேராசிரியர் பிரசாத் நேர்காணல், ‘மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ நூல்கள்’, ‘லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய  ‘அன்னவள்ளி’ நாவல்,  மாதவராஜ் எழுதிய ‘பொய் மனிதனின் கதை’, ஆதி.வள்ளியப்பன் எழுதிய ‘உயரப் பறந்த இந்தியக் குருவி சலிம் அலி’, கூ.பழனியாண்டி எழுதிய ‘ஊர்வாய்’, கலகல வகுப்பறை சிவா எழுதிய ‘கரும் பலகைக்கு அப்பால்’ போன்ற நூல்களும் இங்கு கிடைக்கின்றன.

சிறார் நூல்கள்

உதயசங்கர் மொழிபெயர்ப்பில் சில், சில், சில, பூனை கணக்கு  படிக்கிறது, ரயிலும் குதிரையும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக ளில் பிஞ்சு மனங்களை விசாலப் படுத்தி, ஆனந்தப்படுத்தி புத்தகங்கள் மீதான அச்சத்தைப் போக்கி வாசிப்பை உற்சாக அனுப வமாக்கும் சிறுவர் நூல்கள், உலகப் புகழ் பெற்ற சிறார் கதைகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி களில் நூல்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

உலகப்புகழ்பெற்ற சிறுகதைகள்

ரேயின் உலகப்புகழ் பெற்ற 20 சிறுகதை தொகுப்புகள், ஆயிஷா இரா.நடராஜன் எழுதிய  சாகித்ய அகாதமி, சிறுவர் இலக்கியம் விருதுபெற்ற ‘விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்’ நூல், ‘விண்வெளிக்கு ஒரு  புறவழிச்சாலை’ (உலக விஞ்ஞானச்  சிறுகதைகள்), ‘இரவு பகலான கதை’, ‘டார்வின் ஸ்கூல்’, ‘ஃபீனிக்ஸ்  அறிவியல் நாடகங்கள்’, ‘வந்தே மாதரம்’ (நெடுங்கதை) உள்ளிட்ட பல நூல்களும் விற்பனை செய்யப் படுகின்றன.

குழந்தைகளே எழுதிய நூல்கள்

குழந்தைகளுக்காக குழந்தைகள் எழுதிய ‘சிறுவனும் நல்வாழ்வும்’, ‘காகங்களின் ஆசைகள்’, உள்ளிட்ட பல நூல்களும், சாமிநாத சர்மா எழுதிய ‘எடிசன்’, ‘சர் ஐசக் நியூட்டன்’, ‘சார்லஸ் டார்வின்’, ‘சர்.சி.வி.ராமன்’, ஆயிஷா இரா.நடராஜன் எழுதிய ‘உலக  பெண் விஞ்ஞானிகள்’, ‘மைக்கேல்  பாரடே’, ‘இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்’, அ.வள்ளி நாயகம் எழுதிய ‘ஜே.பி.எல்.ஹால் டேன்’, பேராசிரியர் சோ.மோகனா எழுதிய ‘முதல் பெண்’, த.வி.வெங்க டேஸ்வரன் எழுதிய ‘கணிதமேதை ராமானுஜம்’, ‘ரகமி தொகுப்பும் குறிப்பும்’, ஆர். பெரியசாமி எழுதிய  ‘அறிவியல் முன்னோடி மேரிகியூரி’, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை வரலாறு நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அறிவியல் நூல்கள்

ஆயிஷா நடராஜன் எழுதிய ‘இயற்பியல் சோதனைகள்’, ‘மரபியல்’, ‘நேனோ தொழில் நுட்பம்’, த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய ‘நவீன அறிவியலின் வளர்ச்சி’, ‘மேகம் கருக்குது’, ‘அறிவாளியா? முட்டாளா?’, ‘கண்டோம் கடவுள் துகள்கள்’, ‘தேனி நியூட்ரினோ திட்டம்’, ‘ப.கு.ராஜன் எழுதிய ‘அணு ஆற்றல்’, சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய ‘ஆன்மீகமா அறிவியலா’, அஜய் கன்சால் எழுதி தமிழில் கி.ரமேஷ் மொழிபெயர்ப்பில் ‘கடவுள் உருவான கதை’ உள்ளிட்ட பல  வகையான அறிவியல் நூல்களும், ஆத்மா கே.ரவி எழுதிய ‘பறவை விலங்குகளின் நடத்தைகள்’, ‘தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கின்றது’, பேராசிரியர் பொ.ராஜமாணிக்கம் எழுதிய ‘சூடாகும் பூமி’, ஆதி.வள்ளியப்பன் எழுதிய ‘நம்மைச் சுற்றி காட்டுயிர்’, சு.நாராயணி எழுதிய ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’, கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழர் தாவரங்களும் பண் பாடும்’ உள்ளிட்ட பல்வேறு சூழலி யல் நூல்களும் விற்பனை செய்யப் படுகின்றன.

கதை கம்பளம், அறிவியல் புனை கதைகள், தாம்போய் கதை கள், கணிதம், வானியல், கல்வி,  அரசியல், இயற்பியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு நூல்க ளும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுவர்கள், மாணவர்கள், ஆராய்ச் சியாளர்கள், அரசியல்வாதிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள்,  புரட்சியாளர்கள், சிந்தனையா ளர்கள், முற்போக்காளர்கள் என அனைத்து தரப்பினரின் அறிவுப் பசியைப் போக்கும் அனைத்து நூல்களும் ஒருசேர பாரதி புத்தகாலய அரங்கில் கிடைக்கிறது.