tamilnadu

img

சிந்து சமவெளி பண்பாட்டுக்குச் சொந்தமானது தமிழ் மொழி: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஏப்.16- சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வு கள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரு மிதத்துடன் கூறினார். சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி யும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாள ருமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.இதில் முதல்வர் நூலை வெளி யிட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து முதல்வர் பேசு கையில், “சங்க இலக்கியங்கள் வர லாறு இல்லையே என்று பலரும் நிரா கரித்தார்கள். ஆனால் இப்போதுதான் தொல்லியல் ஆதாரம் கிடைத்தி ருக்கிறது. அதைத்தான் பாலகிருஷ் ணன் அளப்பறிய பணியாக செய்து முடித்திருக்கிறார்” என்றார். சிந்து சமவெளி பண்பாடு என்பது 5  ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அப்போது வாழ்ந்த மக்கள் யார்,

அவர்கள் பேசிய மொழி எது என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த நூலில் காணலாம். சிந்து பண்பாடு பரவியிருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, ஆப்கானிஸ்தான், பாகி ஸ்தான், ஈரான் போன்ற இடங்களுக்குப் போய் ஆய்வு செய்து, அங்கு தமிழ்ப் பெயர்கள் இருப்பதை பதிவிட்டுள்ளார். சிந்து சமவெளி பயன்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமி ழுக்கே உள்ளது என்பதை இந்த ஆய்வு கள் கூறுகின்றன என்றும் அவர் தெரி வித்தார். இவ்விழாவில், ‘இந்து’ என்.ராம், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பாக்சி, அரசு முதன்மைச் செயலர் த.உதயச் சந்திரன், மானுடவியலாளர் பக்த வத்சல பாரதி, சர்மா மரபுக் கல்வி மைய நிறுவனர் சாந்தி பப்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரி யர் ஆர்.பாலகிருஷ்ணன் ஏற்புரை யாற்றினார். முன்னதாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் வரவேற்றார். நிறைவில், ரோஜாமுத்தையா ஆரா ய்ச்சி நூலக பொதுவியல் ஆய்வு மைய ஆய்வாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் நன்றி கூறினார்.