tamilnadu

img

மார்க்சியம் அனைத்து வல்லமையும் கொண்டது; ஏனென்றால் அது உண்மையை பேசுகின்றது

மார்க்சியம் என்பது அனைத்து வல்லமையும் கொண்டது; ஏனென்றால் அது உண்மை யைப் பேசுகின்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் ‘கட்சிக் கல்வி நிரந்தரப் பள்ளி’ துவக்கவிழா செப்டம்பர் 5 வியாழனன்று, கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இளம் கம்யூனிஸ்ட்டுகள் மாணவர்களாக பங்கேற்றுள்ள இந்த நிரந்தரப் பள்ளியின் துவக்க அமர்வுகள் செப்டம்பர் 5 முதல் 8 வரை நடை பெறுகின்றன. இப்பள்ளியை துவக்கி வைத்து   இணைய வழியில் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.  அவர் தமது உரையின் போது, மார்க்சியம் என்பது அனைத்து வல்லமையும் கொண்டது, ஏனென்றால் அது உண்மையைப் பேசுகிறது என்ற லெனின் மேற்கோளை விளக்கிப் பேசினார்.  “லெனினது இந்தக் கூற்று மார்க்சிய வழி முறையின் மேன்மையை எடுத்துக் காட்டுகிறது. அதே சமயம் மார்க்ஸ் எல்லாமே சொல்லிவிட்டார், அவர் எழுதியது மட்டுமே உண்மை என்று அதனை  பொருள்கொள்ளக் கூடாது‌‌.  எல்லாவற்றையும் ஆய்வு செய்வதற்கான அறிவியல் வழிமுறைக்கு அடித்தளத்தை மார்க்சியம் வழங்கியுள்ளது. இந்தி யாவின் திட்டவட்டமான சூழ்நிலைமைகளுக்கு தகுந்த விதத்தில் மார்க்சியத்தை அமலாக்க வேண்டும்” என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.

கே.பாலகிருஷ்ணன்

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், நிரந்தரப் பள்ளியின் நோக்கங்கள் பற்றி பேசினார். அவரது உரையின் அம்சங்கள் வருமாறு: எங்கள் தலைமுறை மார்க்சியத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட காலத்தில் உலகில் சோசலிச முகாம் வலுவாக இருந்தது. சோசலிசமே மாற்று என்று கம்பீரமாக பேச முடிந்தது. தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய பின்னர் பகுத்தறிவோடு, சமதர்மமும் பேச வேண்டும் என்றார். 1990களில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சோசலிசம் பின்னடைவை சந்தித்து மீண்டும் முதலாளித்துவ ஆட்சி வந்துள்ளது. அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், அது  சோசலிசத்தின் வீழ்ச்சி அல்ல; அதை ரஷ்யாவில் அமல்படுத்திய விதத்தில் ஏற்பட்ட கோளாறு என அறுதியிட்டுக் கூறியது மார்க்சிஸ்ட் கட்சி. இன்றைக்கு முதலாளித்துவத்தால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. இத்தகைய நிலையில், சோசலிசத்தின் மீதான நம்பிக்கையை கொடுப்பது, ஏகாதிபத்திய கொட்டத்திற்கு முடிவுகட்டுவது ஆகிய கடமைகள் நமக்கு முன் உள்ளன.  நவதாராளமயக் கொள்கையின் தாக்கம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சாதி நீண்டகாலமாக நிலவுகிறது; அப்படியானால் எதை எதிர்க்கப் போகிறோம் முதலில் என சிலர் கேட்கிறார்கள். வர்க்கப் புரட்சிக்கு சாத்தியம் உண்டா என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இப்படி பல குழப்பங்களை விளைவிக்க முயற்சிக்கிறார்கள். போலியான நம்பிக்கை ஊட்டப்படுகிறது.  இதற்கெல்லாம் பதில் கொடுக்க மார்க்சியத்தை உள்வாங்கி, துல்லியமாக அமலாக்கிட வேண்டிய  காலம் இது. 

கிராம்சி சொல்வதைப் போல, ஒரு மனிதர் பள்ளிக்கூடத்திற்கே போகாவிட்டாலும் அவருக் குள்ளும் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. எனவே தான் நாம் தத்துவத்தில் தெளிவோடு இயங்கி, சரியான தத்துவப் பார்வையுடன் மக்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நிரந்தரப் பள்ளியானது உங்களுடைய சுய கல்விக்கும் தூண்டுதலாக இருக்கும்.  பழைய தலைவர்கள் புத்தகங்களே கிடைக்கா மல் தேடி அலைந்தார்கள். தடை செய்யப்பட்ட நூல்களை தேடித் தேடிப் படித்தார்கள். இப்போது ஏராளமாக நூல்கள் வந்துவிட்டன. மார்க்சியத்தில் வலிமையோடு இருந்தால் எந்த தாக்குதலும் நம்மை வீழ்த்த முடியாது. 17 வயதில் காரல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையை நினைவூட்டுகிறேன்.  “ஒரு மனிதன் எவ்வளவு புலமை பெற்றிருந்தா லும், சமூகத்திற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போதுதான் அவன் முழுமையான மனிதன் ஆகிறான்”  “அதிகமான மக்களை மகிழ்ச்சிப்படுத்து வோர்தான் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.” இப்படி இளமையிலேயே அவரது சிந்தனை யில் ஏற்பட்ட தாக்கம் ஆயிரமாண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர் எனப்பட்ட மார்க்சை நமக்கு கொடுத்தது. நீங்களும் இளமையிலேயே சிறந்த சிந்தனையை கைக்கொள்ள வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.