மணிப்பூரில் திவாலான இரட்டை இன்ஜின் அரசு
2 ஆண்டு துயரத்திற்குப் பின் ஜனாதிபதி ஆட்சி
மணிப்பூரில் குடியரசுத் தலை வர் ஆட்சியைப் பிரகடனம் செய்திருப்பது, இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் திவாலாகிப்போன தன்மையையே வெளிப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்முறை கொந்தளிப்பில் சிக்கித் தவிக்கும் ‘பாஜக இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின்’ முழுமையான திவால் நிலை அம்பலமாகியிருக் கிறது.
உட்கட்சி மோதலை தீர்க்கவே ஜனாதிபதி ஆட்சி
இப்போதும், மணிப்பூரின் நலன் களுக்காக அல்ல, மாறாக ஆளும் கூட்டணிக்குள்ளான உள் மோதல்களைத் தீர்க்க அவகாசம் எடுத்துக் கொள்வதற்காகவே குடியர சுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதர வைப் பெற்றவரும், மணிப்பூர் வன் முறையின் முக்கிய குற்றவாளியுமான அம்மாநில முதலமைச்சருக்கு எதி ராக- அவருடைய மதவெறிப் பிரச்சாரங்கள் ஆதாரத்துடன் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தால், அவர் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
ஒன்றிய பாஜக அரசின் ஆதரவுடன் நடந்த வன்முறை
இந்த அனைத்து நிகழ்வுகளிலும், ஆளும் கட்சியின் ஒன்றியத் தலைமை யும், ஒன்றிய அரசும் மணிப்பூர் மக்கள் அனுபவித்து வரும் ஆழ்ந்த துன்பத்தைத் தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டன.
பதற்றமான மாநிலத்தைப் பார்வை யிடக்கூட இரக்கமற்ற முறையில் பிரதமர் மறுத்ததே அதற்கான சாட்சி யாகும். இது, ஆளும் கட்சி மற்றும் அதன் தலைமையிலான மாநில மற்றும் ஒன்றிய அரசின் மதவெறி அணுகுமுறையை அம்பலப்படுத்தி யிருக்கிறது.
மாநில மற்றும் அம்மாநில மக்களின் நலன்களை விட அதன் சொந்த அரசியல் நலன்களையே பாஜக முதன்மைப்படுத்தியது.
இப்போதாவது அமைதிக்கான தீர்வுகளை எட்ட வேண்டும்
மணிப்பூரில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது தீர்வல்ல. இருப்பி னும், இப்போது ஒன்றிய அரசு அதன் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் அங்கே மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிளவுகளை சரிசெய்வதற்கான நட வடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
அனைத்து அர சியல் கட்சிகளையும் நம்பிக்கையுடன் அழைத்து, இயல்புநிலை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கான நியாயமான தீர்வு களை எட்ட வேண்டும். அதே சம யத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் தேர்தல்களை நடத்துவது உட்பட மாநில மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.