குல்காம், ஜூன் 2- காஷ்மீர் மாநிலம் குல் காம் மாவட்டத்தில் உள்ள இலாகி தேஹாதி வங்கியில் மேலாளராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந் தார். ஜூன் 2 காலை வங்கிக் குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி யால் விஜயகுமாரை நோக்கி சுட்டார். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை சக ஊழி யர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்து வர்கள் உறுதி செய்தனர்.சம்பவம் நடந்த பகுதியை போலீஸார் சுற்றி வளைத் துள்ளனர்.