புதுதில்லி, பிப்.14- சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோடி ஆட்சி காலத்தை போல வேறு எந்த ஆட்சி காலத்திலும் வங்கி கடன் மோசடி நடை பெறவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டு மான நிறுவனம் 22,842 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டிருப்பது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி விடுதலைக்கு பிந்தைய 75 ஆண்டு களில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடிகள் மோடி ஆட்சியின் கீழ் நடை பெற்றுள்ளது கவனிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் 5,35,000 கோடி அளவுக்கு வங்கி கடன் மோசடிகள் நடந்துள்ளது என்று கூறியுள்ள ராகுல், மோடி யின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே இது சிறந்த ஆட்சி என்றும் விமர்சனம் செய்துள்ளார். இதனிடையே சண்டிகரில் செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பா ளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மோடி ஆட்சி யில் நிகழ்ந்த கடன் மோசடிகளில் தனது வங்கிகளின் கட்டமைப்பே சிதைந்துவிட்டது என்று குற்றம் சாடினார். மோடி அரசு வங்கி மோசடியாளர்களுக்காக கொள்ளை யடித்து தப்பி செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றும் கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். மோசடி பட்டியலில் உள்ள நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட பலர் பாஜக வுக்கு நெருக்கமானவர்கள் என்றும் சுர்ஜே வாலா குற்றம் சாட்டியுள்ளார்.