tamilnadu

img

அருமனை - கடையால் - பாகோடு பேரூராட்சி தலைவர்கள்: சிபிஎம் வெற்றி

அருமனை, மார்ச் 4- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளை கைப்பற்றியது. வெள்ளியன்று  (மார்ச் 4) காலை நடந்த தலைவருக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வி.எம்.லத்திகா மேரி  போட்டி யிட்டார் . இவர் 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் ஜாய் பிரைட் 4 வாக்குகள் மட்டும் பெற்றார். மதியம் நடை பெற்ற துணை தலைவர் தேர்தலில் சுலோஜனா (திமுக) தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், சிபிஎம் அருமனை வட்டார செயலாளர் சசிகுமார், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி, திமுக பேரூர் செயலாளர் தேவதாஸ், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் சதீஷ் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

பாகோடு

பாகோடு பேரூராட்சியில் இதே கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். துணை தலைவராக  ஜினுமோள் (காங்கிரஸ்) வெற்றி பெற்றுள்ளார். ஆர்.ஜெயராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளராக உள்ளார்.

கடையால்

கடையால் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் தலைவராக ஆர்.ஜுலியட் மொத்தம் உள்ள 18 வாக்குகளில் 13 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள் ளார். துணை தலைவராக விஜி மெர்லின் (திமுக) வெற்றி பெற்றுள்ளார்.