tamilnadu

img

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு: முதல்வர் அஞ்சலி!

சென்னை, டிச.27- மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகரும், நடி கருமான மாணிக்க விநாயகத்தின் (வயது 78) உடலுக்கு தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிக ளில் 800-க்கும் மேற்பட்ட பாடல் களை பாடியுள்ளார்.குறிப்பாக, தவசி, பருத்திவீரன், வெயில், சந்திரமுகி உள்ளிட்ட படங்களின் பாடல்களை பாடியுள்ளார். மேலும்,திருடா திருடி, வேட்டைக் காரன் உள்ளிட்ட சில படங்களி லும் நடித்துள்ளார். இந்த நிலையில்,சென்னை யில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) மாலை 6.45 மணிக்கு மாரடைப்பு காரணமாக மாணிக்க விநாய கம் காலமானார். மறைந்த மாணிக்கம் விநாயகத்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், திரு வான்மியூரில் உள்ள மாணிக்க விநாயகத்தின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் அவரது குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அப்போது, முதல்வருடன் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் உடனிருந்தார். திங்களன்று(டிச.27) 4 மணிக்கு கோட்டூர் புறத்தில் உள்ள இடுகாட்டில் மாணிக்கம் விநாயகத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணிக்க விநாயகம் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற னர். அந்த வகையில்,திமுக தலை வரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்தார்.இதுகுறித்து, தனது  ட்விட்டரில், “பிரபல திரைப் படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்கவிநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்த முற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்று முதல மைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக் கிறார்.