tamilnadu

img

கிராமப்புற தகவல் தொடர்பை மேம்படுத்த பிராட் பேண்ட் இணைப்பு செயல்படுத்தப்படுகிறது

புதுதில்லி, ஜூலை 21- கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூரப் பகுதிகளில் இணைய வழித் தகவல் தொடர்பை மேம்படுத்து வதற்காக நாட்டில் உள்ள எல்லா கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் பிராட்  பேண்ட் இணைப்பு பாரத் நெட் திட்டத்தின் கீழ், பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. கிராமப்புறத்திலும் தொலை தூரப் பகுதிகளிலும் வசிக்கும் மக்க ளிடையே தொலைத் தொடர்பு உள் கட்டமைப்புகளை மேம்படுத்து வதற்காக  நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவை உபயோகப்படுத்தப்பட்டதன் விவரங்கள் என்ன? ஆப்டிக் ஃபைபர் கேபிள்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதா? அதன் விபரங்கள் என்ன? தொலைத்தொடர்பு கொள் முதல்களை நியாயவிலையில் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன என்று மக்கள வையில் கேள்வி நேரத்தின் போது பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதி லளித்த ஒன்றிய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீ.தேவு சிங் சவுகான் கூறியதாவது:

“அலைக்கற்றைகள் பாதுகாப்புப் படைகளால் விடுவிக்கப்படுவதற் காக, அர்ப்பணிக்கப்பட்ட, ஆப்டிக் ஃபைபர் கேபிள் அடிப்படையிலான நெட் வொர்க்கை அளிக்கும் பொருட்டு, அலைக்கற்றை நெட் வொர்க் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முழுமையான தொலைத்தொடர்பு நெட் வொர்க்  என்பது எல்லா பாது காப்பு நிறுவனங்களையும் உள்ள டக்கி பாதுகாப்புப் படைகளின் பிரத்யேகமான உபயோகத்திற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தேவையின் அடிப்ப டையில் நிதிநிலை அறிக்கையில் 24,664 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 19,185.55 கோடி ரூபாய் நாளது வரை உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

பாரத் நெட் திட்டம்

கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூரப் பகுதிகளில் தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காக, நாட்டில் உள்ள எல்லா கிராமப் பஞ்சாயத்து களுக்கும் பிராட் பேண்ட் இணைப்பை கட்டம் கட்டமாக அளிக்கும் பொருட்டு பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022 ஜூலை 4ஆம் தேதியின்படி, மொத்தமாக 1,77,550 கிராமப் பஞ்சாயத்துகளில் இச்சேவை தயார் நிலையில் உள்ளது. தற்போது நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்து களை தாண்டிய கிராமங்கள் வரை யிலுமாக பாரத் நெட் திட்டத்தின் வாய்ப்பு விரிவாக்கப்பட்டு உள்ளது. பாரத் நெட் திட்டத்தின் கால வரை யறை 2025 ஆகும். தகவல் தொலைத்தொடர்பு துறை மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களில் டெண்டர் நிலைகள் கட்டுப்பாடற்றவையாகவே வைக்கப்பட்டு உள்ளன. நியாய மான மற்றும் போட்டி விலைகளை அடைவதற்காக டெண்டர் முறை களில் வெளிப்படையான இ-டெண் டர் (e-tender) வழிமுறைகளும், அதை தொடர்ந்து இ-ரிவர்ஸ் (e-  reverse) ஏலங்களும் நடத்தப்படு கின்றன.” இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.