tamilnadu

அவதூறு செய்திக்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் மறுப்பு

சென்னை,ஜன.8- ஆட்டோ தொழிலாளர்கள் மீதான தினமலர் ஏட்டின் அவதூறுகளுக்கு  தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னம் சிஐடியு மறுப்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்க்கையை பற்றி அறியாமல், உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை, ஆட்டோ தொழிலாளர்களின் மீது அவதூறு பரப்பும் நோக்கத் தோடு, தினமலர் வெளியிட் டுள்ளது. இது முதல் முறை அல்ல. தொடர்ந்து திட்டமிட்டு ஆட்டோ தொழிலாளர்கள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறது.

ஆட்டோ தொழிலாளர்க ளிலும் மிக குறைவாக தவறு செய்பவர்கள் இருப்பார்கள். இந்த உண்மையை மறைத்து ஆட்டோ தொழிலில் மட்டும் தான் மிக மோசமாக இருப்பது போல எழுதி இருப்பதில் இருந்தே இச்செய்தி முழுக்க முழுக்க கற்பனையானது, உண்மைக்கு புறம்பானது என்பதை உணர முடியும். தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில் 99 விழுக்காடு  உண்மைக்கு மாறானது.  பத்திரிக்கை சுதந்திரத்தை  தவறாக பயன்படுத்துகிறது. ஏனெனில்கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தற்கு பிறகு, மிகப் பெரிய நெருக் கடியை சந்தித்த  தொழிலாக ஆட்டோ தொழில் மாறி இருக்கி றது. கடனில் வாங்கிய ஆட்டோக் களின் கடனுக்கு தவணை கட்ட முடியாமல், ஆர்டிஓ அலு வலகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் கடன் தொல்லையால் நூற்றுக் கும் மேற்பட்ட ஆட்டோ தொழி லாளர்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டு, வாழ வழியில்லாமல், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு இறந்த சோகம் இன்னும் மறைய வில்லை. ஆனால், பயணி களை மிரட்டி கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்திருப்பது அவர்க ளது அறியாமையை என்ன வென்று சொல்வது?.

2013 இல் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தில் இன்றும் ஆட்டோ இயக்க முடியுமா? 2013இல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 எனவும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ  மீட்டருக்கும் 12 ரூபாய் என்பது நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விவரம் கூட சரியாகக் குறிப்பிடப்படவில்லை. அன்றைக்கு டீசல் விலை, பெட்ரோல் விலை, கேஸ் விலை  எவ்வளவு? இப்போது எவ்வ ளவு என்பது தினமலர் பத்திரிக் கைக்கு தெரியாத விஷய மல்ல. 2013இல் தினமலர்  விளம்பர  கட்டணம் என்ன? இப்போது என்ன? அதே கட்டணத்தை தான் இன்றும் வாங்குகிறதா? மாமியார் உடைத்தால் மன் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?

தங்கள் பத்திரிக்கையில் வெளிவந்த அவதூறு செய்திகளை உண்மைச் செய்தி களை நம்பி, அதனை ஆதார மாகக் கொண்டு, ஆட்டோ  தொழிலாளர்கள் மீது அதிகாரிகள் அடக்கு முறையை ஏவி விட வாய்ப்பிரு க்கிறது. அப்படி அடக்கு முறை ஏவபட்டால் ஆட்டோ  தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் வலுவான எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அரசு போட்ட உத்தரவு படி  இலவசமாக ஜிபிஎஸ் மீட்டர்  வழங்கப்படவில்லை என்பதும்,  அரசு உத்தரவை அரசு அமலாகவில்லை இருந்தது என்பதுதான் உண்மை. ஜிபிஎஸ் மீட்டர் வழங்க  ஒதுக் கப்பட்ட அந்த 82 கோடி ரூபாய் பணம் இப்போது எங்கே இருக்கிறது என்ற கேள்வியை தினமலர் ஏடு எழுப்புமா? பெண்களை  தாயாக, சகோதரியாக, மகளாக பாவிப்பவர்கள் தான் ஆட்டோ தொழிலாளர்கள். அதனால்தான் ஆட்டோ தொழிலாளர்களை நம்பி, தங்கள் வீட்டு குடும்ப பெண் களை, நள்ளிரவு நேரத்தில் கூட தனியாக வரும் தங்கள்  வீட்டு பெண்களை அழைத்து வரும் பொறுப்பை ஆட்டோ தொழிலாளர்களிடம் ஒப்படைக் கிறார்கள்.

ஆட்டோ தொழிலாளர்க ளும் அந்த நம்பிக்கையை நிறைவேற்று கிறார்கள். இந்த உண்மை தினமலர் போன்ற பத்திரிக்கைக்கு தெரிந்து இருக்க வேண்டும். இவ்வளவு மோசமாக சித்தரித்து இருப்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். ஆட்டோ தொழிலாளர்கள் வெந்து நொந்து ஆட்டோக் களை இயக்கி போதிய வருமானம் இல்லாமல் சேவை  செய்து வருகிறார்கள். சேவை யையே நோக்கமாகக் கொண்டு  செயல்படும் ஆட்டோ தொழி லாளிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகவே கருது கிறோம். தமிழ்நாடு முழுவதும் உயிரை துச்சமென கருதாமல் சேவை செய்த ஆட்டோ தொழிலாளர்களை தினமலர் ஏடு பாராட்ட வேண்டாம்,  அவர்கள் மீது அவதூறு செய்யாமல்  தினமலர் இருந்தி ருக்கலாமே, என்ற ஆத ங்கம் ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர்கள் மனதிலும் வந்து போகிகிறது. விளிம்பு நிலை மக்களின் வாகனமான ஆட்டோவை இயக்கக்கூடிய ஆட்டோ தொழிலாளர்கள் மீது அபத்தங்களை, அவதூறு களை அள்ளி வீசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.