திருவாரூர், ஜூன்-11 ஆட்டோ தொழி லில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுக்கு வீட்டு வசதி வாரி யத்தில் 10 சதவீதம் வீடுகள் ஒதுக்க வேண்டும். வீடு கட்ட கடன் வழங்க வேண்டுமென ஆட்டோ தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. திருவாரூரில் வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 9 ஆவது மாநில மாநாடு நடைபெற் றது. சனிக்கிழமை நடை பெற்ற பிரதிநிதிகள் மாநாட் டிற்கு சம்மேளனத்தின் தலைவர் வி.குமார் தலைமை யேற்றார். சிஐடியு மூத்த தலைவர் எம்.சந்திரன் கொடி யினை ஏற்றி வைத்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் வரவேற்றுப் பேசினார்.
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொழிற்சங்க தலைவர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.மோகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தமிழகம் முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக் குள் கொண்டு வந்து விலை யை அரசே தீர்மானிக்க வேண்டும். மோட்டார் வாக னச் சட்ட திருத்தத்தை தமி ழகத்தில் அமல்படுத்தக் கூடாது. தொழிற்சங் கங்களை அழைத்துப் பேசி கட்டுப்படியான விலை நிர்ண யம் செய்ய வேண்டும், ஆன் லைன் அபராத முறையை முற்றிலும் கைவிட வேண்டும். ஓலா, உபேர் போன்ற பன்னாட்டு செயலி களைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ தொழி லாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண் டும், விமான நிலையம், ஜிப்மர், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.