சென்னை, மே 12 - ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் 50 ரூபாயாக நிர்ண யிக்க வேண்டுமென்று ஆட்டோ தொழிற் சங்கங்கள் கோரியுள்ளன. ஆட்டோ மீட்டர் கட்டம் 2013ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்பு பெட்ரோல், எரிவாயு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் கட்டணம் மாற்றி அமைக் கப்படவில்லை. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பெட்ரோலியப் பொ ருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.கே.எம்.சிவக் குமரன் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு வியாழனன்று (மே 12) சென்னையில் ஆட்டோ தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. இதில் தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிர மணியம் உள்ளிட்டு 15க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதா வது: தமிழக அரசு கடந்த 50 ஆண்டு களில் 4 முறை மட்டுமே மீட்டர் கட்ட ணத்தை நிர்ணயித்தது. ஆண்டுதோறும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், தமிழக அரசு 8 ஆண்டுகளுக்கு பிறகு தற் போது கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆட் டோக்களுக்கு விஞ்ஞான முறையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்
ஆட்டோ செயலி
ஓலா, உபேர் போன்று தமிழக அரசும் ஆட்டோ செயலி (ஆப்) ஒன்றை தொடங்க வேண்டும். ஆட்டோ நலவாரி யத்தில் உள்ள நிதியிலிருந்தே இதை செய்ய முடியும். ஓலா, உபேர் ஓட்டுநர்க ளிடம் இருந்து 100க்கு 30 ரூபாயும், பய ணிகளிடம் இருந்து 15 ரூபாயும் கமிஷனாக எடுத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக அரசு ஆப் தொடங்கி, ஓட்டுநர்களிடம் இருந்து 15 ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளலாம். அரசு க்கு ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும். கட்டணம் குறையும் போது பயணிகளும் அரசு செயலியையே பயன்படுத்து வார்கள். இதை முதலமைச்சர் செய்வார் என்று நம்புகிறோம்.
ஜிபிஎஸ் மீட்டர்
அதிமுக ஆட்சியில் 82 கோடி ரூபாய் ஒதுக்கி ஆட்டோக்களுக்கு இலவச ஜிபிஎஸ் மீட்டர் பொருத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் தரவில்லை. ஆகவே, தமிழக அரசு ஆட்டோக்களில் இலவச ஜிபிஎஸ் மீட்டரை பொருத்தினால் பாலி யல் குற்றங்கள் குறையும். 3 மாதத்தி ற்கு ஒருமுறை மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு நவீன கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3.20 லட்சம் ஆட்டோக்களிலும் எளிதாக கட்டணத்தை மாற்றி அமைக்க முடியும். 2013ஆம் ஆண்டு பெட்ரோல் 70 ரூபாய், ஆட்டோ கேஸ் 30 ரூபாய்க்கு விற்றபோது கட்டணமாக 1.8கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும் நிர்ண யிக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் 114 ரூபாயும், கேஸ் 74 ரூபாய்க்கும் விற்கிறது. ஆகவே, 1.5 கிலோ மீட்ட ருக்கு 50 ரூபாயும், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 25 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும். முத் தரப்பு குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒரு முறை கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி னோம். அரசு மீண்டும் அழைத்து பேசி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.