சிட்னி, டிச.29- 21 ஆம் நூற்றாண்டில் வேறு எந்த பெரிய பொருளாதார நாடும் சந்திக்காத அளவுக்கு பெரும் நெருக்கடியில் ஆஸ்தி ரேலியா சிக்கியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் இருந்ததைவிட தற்போது 221 விழுக் காடு அளவுக்கு கடன் அதிகரித்துள்ளதாக சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதற்கு முன்பாக 1964 ஆம் ஆண்டில்தான் இத்தகைய நெருக்கடியை ஆஸ்திரேலியா சந்தித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி யோடு ஒப்பிடுகையில் 44.1 விழுக்காடு கடன் என்பது நெருக்கடியின் தீவிரத்தைக் காட்டுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகக் கடுமை யான பின்னடைவை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் ஜி20 நாடுகளில் ஆஸ்திரேலியா தான் இவ்வளவு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியால் வரும் பத்தாண்டுகளுக்கு பற்றாக்குறை பட்ஜெட்தான் போட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தப் புள்ளிவிபரங்களை ஆஸ்திரேலிய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. கடன் 221 விழுக்காடு உயர்ந்திருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவின் நிதியமைச்சர் ஜோஸ் பிரை டென்பெர்க்கும் அறிவித்துள்ளார்.
டாட்.காம் சரிவு, உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போது கொரோனா பாதிப்பு என்று தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்பு களிலிருந்து ஆஸ்திரேலியா மீளமுடியாமல் தவிக்கிறது. மேலும் சில நாடுகளும் கடந்த 20 ஆண்டுகளில் பெரும் பாதிப்பு களை சந்தித்துள்ளன. அமெரிக்கா 188 விழுக்காடு, பிரிட்டன் 185 விழுக்காடு, தென் கொரியா 174 விழுக்காடு மற்றும் ஸ்பெயின் 121 விழுக்காடு கடன் அதிகரிப்பை சந்தித்துள்ளன. ஸ்விட்சர்லாந்து, இந்தோனேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கடனைக் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2024-25 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய பட்ஜெட் 1.2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு கடன் என்று காட்டப் போகிறது. 2031-32 ஆம் ஆண்டுக்குள் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதுதான் தற்போதைய நிலையாகும்.