பில்கிஸ் பானு வழக்கில் ஆக.7 இறுதி விசாரணை
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த 2002 இல் அரங்கேறிய இஸ்லா மியர்களுக்கு எதிரான வன்முறையின் பொழுது பில்கிஸ் பானு என்ற பெண் கும்பல் பாலியல் வன்கொடு மை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினர் கொடூர மாக அடித்துக் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரை குஜ ராத் அரசு விடுதலை செய்த தற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், ஆகஸ்ட் 7இல் இறுதி விசார ணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் போராட்டம் நடத்திய ஹரிஷ் ராவத்
கனமழையால் உத்தர கண்ட் மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெள்ள நீரை வெளியேற்ற ஆளும் பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் மக்கள் இயல்புநிலை இழந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன் னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் ஹரித்வாரில் தேங்கிய வெள்ளம் சூழ்ந்த இடத்தில் நாற்காலியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
ஒருபொழுதும் பாஜகவை ஆதரிக்க மாட்டேன்
“என்னால் பாஜகவை ஆதரிக்க முடியாது. முற்போ க்கு அரசியலை தொடரு வேன். உள்ளடக்கம், சமத்து வம், மதச்சார்பின்மை, ஜன நாயகம் ஆகிய கொள்கை களில் தேசியவாத கட்சித் தொண்டர்கள் உறுதியாக நிற்க வேண்டும்” என தேசிய வாத இளைஞரணித் தொண்டர்களிடம் அக்கட்சி யின் தலைவர் சரத் பவார் உரையாற்றினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம் : அலறும் பாஜக எம்பி.,
“தில்லி வெள்ளம், மேற்கு வங்க தேர்தல் வன் முறை என இரண்டு முக்கிய விவகாரங்களையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் திசை திருப்பி விட்டு உள் ளது. வெள்ள நெருக்கடி யான சூழலில் அதனை விட்டு விட்டு, கூட்டத்திற்கு சென்று உள்ளார் கெஜ்ரி வால். என்ன மாதிரியான ஒரு முதல்வர் இவர்? என பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்தால் கலக்கமடைந்த பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் தில்லி வெள்ளம், மேற்கு வங்க தேர்தல் வன் முறையை குற்றச்சாட்டாக கூறி அலறியுள்ளார்.
‘பாஜக ஆட்சி இந்திய சூழலுக்கு உகந்தது அல்ல’
“வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு எல்லா வரம்புகளையும் தாண்டி விட்டது. புதிய தலைமுறையினரின் நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி உடைத்துள்ளார். பாஜக ஆட்சி நாட்டின் சூழலுக்கு உகந்ததாக இல்லை. நாட்டின் சாமானியர்கள் அனைவராலும் இதனை உணர்ந்து கொள்ள முடிகிறது” என்று குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி சார்பில் அபிஷேக் பச்சன் தேர்தலில் போட்டி?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 1984 தேர்தலில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனை, சமாஜ்வாதி கட்சி, மாநிலங்களவை எம்.பி. ஆக்கியது. இதனிடையே, வரும் 2024 தேர்தலில் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனை பிரயாக்ராஜ் தொகுதியில் நிறுத்த சமாஜ்வாதி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘சாதி, மதங்களை பெருமையாகப் பார்க்க வேண்டும்!’
“அனைத்து மக்களும் சமம் என்ற நிலை வர வேண்டும். அதற்காகத்தான் பாமக போராடு கிறது. சாதியை ஒழிக்க முடியாது. சாதியையும் மதங்களையும் பெருமையாக பார்க்க வேண்டும். அதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சாதியில் அழகான வழிமுறைகள் இருக்கிறது, பழக்க வழக்கங்கள் இருக்கிறது. மதத்தில் எவ்வளவோ நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கிறது. இதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும். இதையெல்லாம் நாம் பெருமையாகப் பார்க்க வேண்டும். சாதி என்று சொன்னாலே ஏதோ கெட்டவார்த்தை போல பார்க்கிறார்கள். சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? சாதி என்பது ஒரு அழகிய சொல்” என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பருவ மழை குறைந்து வெப்பநிலை அதிகரிப்பு
சென்னை,ஜூலை 17- தமிழ்நாடு புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை குறைந்து, வெயில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழையால், பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. தில்லி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழை, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களி லும், கேரளா, கர்நாடகாவிலும். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக பெய்துள்ளது. தற்போது, தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து, மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி யில் 39; ஈரோடு மற்றும் மதுரையில் 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதாவது நான்கு இடங்களி லும் 100 டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது.
தக்காளி விலை மீண்டும் உயர்வு
சென்னை, ஜூலை 17- சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கிலோ வுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.120க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை யில் தக்காளி விலை ரூபாய் 150 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மொத்த விற்பனையில் கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி திங்களன்று(ஜூலை 17) மேலும் ரூபாய் 10 உயர்ந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
சென்னை,ஜூலை 17- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.44,288க்கு விற்பனையா னது. ஒரு கிராம் ரூ.14 குறைந்து ரூ.5,536க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை, ஜூலை 17- உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்க ளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், தலைமைச்செய லகத்திற்கு வருவோர் தீவிர கண்காணிப் புக்கு பிறகே உள்ள அனுமதிக்கப் பட்டனர்.
உலகச் செய்திகள்
குளிர்பானங்களில் இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் அஸ்பார்டமி என்ற வேதிப்பொருளை அதிகமாகப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று உலக சுகாதாரக் கழகம் எச்சரித்துள்ளது. இதுவரையில் இந்த வேதிப்பொருளால் பெரிய அளவில் ஆபத்தில்லை என்று சொல்லி வந்தாலும், இந்தப் பயன்பாட்டிற்கும், புற்றுநோய் உருவாவதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்டு மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், துர்க்கியே(துருக்கி) நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வுள்ளார். அமெரிக்க ராணுவக் கூட்டணி நேட்டோவில் உறுப்பு நாடாக உள்ள துர்க்கியே, விளாடிமீர் புடினை வரவேற்கத் தயாராகி வருகிறது. இந்தத் தகவலை துர்க்கியேயின் ஜனாதிபதி எர்டோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மோசமாகியுள்ளதால் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நெருக்கடி நிலைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க அனைத்து ஆதாரங்களையும் திரட்டுவதற்காகவே நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவு கூறுகிறது. கடுமையாக உயர்ந்துள்ள பொருட்களின் விலைதான் முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.