மதுரை,ஜன. 9- மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அடுத்துள்ள கல்மேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதி யை சேர்ந்தவர் லட்சுமி. கண வனை இழந்த நிலையில் தன்னுடைய மகள் , மகன், மற்றும் பேரனுடன் இந்த பகுதியில் வசித்து வந்துள் ளார். இந்நிலையில் மூத்த மகள் ஜோதிகாவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் அன வருக்கும் தொற்று வந்து விடும்; வாழ்வாதாரம் முடங்கி விடும் என்ற அச்சத்தில் லட்சுமி(46), கொரோனா வால் பாதிக்கப்பட்ட மகள் ஜோதிகா (23), மகன் சிபிராஜ் (13), ஜோதிகாவின் மகன் ரித்தீஷ்(3) ஆகிய நான்கு பேரும் சாணிபவு டரை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லட்சுமி மற்றும் மகன் சிபிராஜ் ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிலை மான் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.