சேலத்தில் மலைக்குறவர் மக்கள் மீது தாக்குதல்; வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
சேலம், ஜூன் 14- சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் வட்டம், தமையனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மலைக்குற வர் இன மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது. இந்தச் சம்ப வத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மலைக்குறவர் மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளது.
கடந்த ஐந்து தலைமுறைகளாக தமையனூர் மாரியம்மன் கோவி லில் மலைக்குறவர் மக்களும், அப்பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்க சமூகத்தினரும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், கடந்த ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தேர்த் திருவிழாவின்போது, மலைக் குறவர் மக்கள் தேர்த் திருவிழா வில் பங்கேற்கவும், வரி செலுத்த வும் கூடாது என சாதி ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்
இதற்கு மலைக்குறவர் மக்கள், தாங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் வழிபாடு நடத்தி வருவதாகவும், தொடர்ந்து வரி செலுத்தி வருவதாகவும் கூறி, தேர்த் திருவிழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வெள்ளியன்று இரவு மலைக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதிய வர்கள் மற்றும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காய மடைந்தவர்கள் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். பாதிக்கப்பட்ட மக்கள் எத்தாப் பூர் காவல் நிலையத்தில் புகாரளித் துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தக வலறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக் கப்பட்ட மலைக்குறவர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சாதிய பாகுபாட்டுடன் நடந்து கொண்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இருதரப்பு மக்களும் மாரி யம்மன் கோவிலில் வழிபாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், மாவட்ட நிர்வாகி ராமசாமி, சிபிஎம் ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், பெத்தநாயக்கன் பாளையம் செயலாளர் ஏ.ஆறு முகம், மலைக்குறவர் சங்க மாவட்டச் செயலாளர் தனபால் ஆகி யோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.