tamilnadu

img

ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலை, பிப்.12- திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திருவண்ணாமலையில் மாரி யம்மன் கோவில் தெரு மற்றும் பகுதி யில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கி யின் ஏ.டி.எம். மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இதில் மாரி யம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத் துக்குள்  நள்ளிரவு புகுந்த கொள்ளை யர்கள் கேஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதை யடுத்து தேனிமலை பகுதியில் உள்ள  ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது. கேஸ் வெல்டிங் மூலமாக எந்தி ரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தை யும் எடுத்துச்சென்றனர்.

இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி சென்றது. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்தில் மெயின் ரோட்டில் ‘இண்டியா ஒண்’ வங்கி ஏ.டி. எம். மையத்தில் புகுந்த கொள்ளை யர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர். இதன் பிறகு போளூர் சென்ற கொள்ளை யர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்தி ரத்தை உடைத்தனர். அதில் இருந்த ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றனர். சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைகடையின் இரும்பு ஷட்டரை கேஸ் வெல்டிங் மூல மாக சத்தமில்லாமல் உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த 9 கிலோ தங்க நகைகளை  கொள்ளை யடித்துச்சென்றனர்.  இந்த  சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலை யில் 4 ஏடிஎம் இயந்திரங்கள் உடைக் கப்பட்டு பணம் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது.  இந்த கொள்ளை சம்ப வத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீ சார் விசாரணையை முடுக்கி விட்டுள் ளனர்.

 எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

ஏடிஎம் கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளது. இதனால் தமிழக காவல்துறை யினருக்கு  காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சில அறிவு றுத்தல்களை வழங்கியுள்ளர். அதில் திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங் களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிரமாக கண்கானிக்க வேண்டும்.  மாநில எல்லை சுங்கச்சாவ டிகளிலும் தீவிர சோதனை நடத்த வேண்டும்.அண்டை மாநில காவல் துறையினருடன் இணைந்து வாகன தணிக்கை செய்ய வேண்டும்.  கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டு பிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்த வேண்டும்.  திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர் களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் திருப்பத்தூர் சாலையிலும் அதே போல் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையிலும், வாணி யம்பாடி செட்டியப்பனூர் கூட்டுரோடு பகுதியில் போலீசார், அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங் களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டனர்.  இதேபோல் ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பேரணாம்பட்டு பத்திரபல்லி, பனமடங்கி, சேர்க்காடு, சோதனை சாவடி மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வேலூர் விடுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.