சென்னை,மார்ச் 28- தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர்கள் பிரேசில் செல்ல தலா ரூ.30 ஆயிரம் உதவி தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 24 வது கோடைகால காது கேளாதோருக் கான ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் சமீஹா பர்வீன் (19) (நீளம் தாண்டுதல், ஆர்.சினேகா(25) நீச்சல் (50 மீ/100மீ) பின்னோக்கி நீந்துதல் (50 மீ/100 மீ) ஜெர்லின் அனிகா(18) இறகுப்பந்து மற்றும் வீரர்கள் கே.மணி கண்டன் 19- (நீளம் தாண்டுதல்), ஆர்.சுதன் (24) - மும்முனை தாண்டுதல், பிரித்வி சேகர் (29) -டென்னிஸ் தனிநபர் ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வீரர், வீராங்கனை கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரேசில் செல்ல அரசின் சார்பில் விமானக்கட்டணம் மற்றும் உதவிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனை வருக்கும் விமானக்கட்டணமாக தலா ரூ.30ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் வீரர்கள் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பும் வரையில், தகவல் தொடர்பு கொள்ளவும் வசதியாக வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.