பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெற்றோரை இழந்த நிலையிலும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பை தொடரும் 11 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், தலா ரூ.75,000 வீதம் ரூ.8,25,000 மதிப்பிலான விபத்து காப்பீட்டு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி புதன்கிழமை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.