tamilnadu

img

மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழை

வங்கக்கடலில் மத்திய மேற்கு பகுதியில் உருவான அசானிப்புயல் ஆந்திராவில் மசூலிப்பட்டினம் அருகே புதனன்று (மே11) கரையை கடந்து வலுவிழந்தது. இதனால் பலத்தக்காற்று வீசியதால் கரையோரப்பகுதி பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.அசானி புயல் காக்கிநாடா, விசாகப்பட்டினத்தை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியை நெருங்கிய போது வலுவிழந்தது. அப்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையும் பெய்தது.