சென்னை, செப். 7 - அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற மூடநம்பிக்கை பிரச்சாரத்திற்கும், பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் (எஸ்எம்சி) எந்த தொடர்பும் இல்லை என்று குழுவின் தலைவர் ம.சித்ரகலா கூறினார். சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளிகளில் ஆக.28 ஆம் தேதி ‘நன்னெறி கல்வி’ என்ற வகுப்பு நடைபெற்றது. இதில், பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு மூட நம்பிக்கை பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் கேள்வி கேட்ட பார்வை மாற்றுத் திறன் ஆசிரியரையும், பிற ஆசிரியர்களையும் அவமரி யாதை செய்தார். இதற்கெதி ராக செப்.6 அன்று அசோக் நகர் பள்ளி முன்பு மாண வர்கள் மறியல் நடத்தினர். எஸ்எம்சி ஏற்பாட்டில் தான் அசோக் நகர் பள்ளி யில் நிகழ்ச்சி நடத்தப்பட் டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளியின் எஸ்எம்சி தலைவர் ம.சித்ர கலா மற்றும் உறுப்பினர்கள் சனிக்கிழமையன்று (செப்.7) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ம.சித்ரகலா கூறியதாவது: பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான தேர்தல் ஆக.24 ஆம் தேதி நடந்தது. ஆனால், ஆன்மீகம் என்ற பெயரில் மகாவிஷ்ணுவின் மூடநம்பிக்கை பிரச்சாரம் 28 ஆம் தேதி நடந்தது. இதை மேலாண்மை குழு தான் ஏற்பாடு செய்து என்று கூறு கின்றனர். இதில் துளியும் உண்மை கிடையாது. இந்தக் குழு அத்தகைய ஏற்பாட்டை செய்யவில்லை. மேலாண்மைக் குழு கூட்டம் இதுவரை நடத்தப்படவே இல்லை. இந்த நிகழ்வுக்கும் மேலாண்மைக் குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆன்மீகம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து மேலாண்மை குழுவிற்கு பள்ளி நிர்வாகம் தெரிவிக்க வில்லை. பிறகு, மேலாண் மைக் குழு எப்படி ஏற்பாடு செய்ய முடியும்? தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தியதாக அதற்கு பிறகு தெவித்தனர். பள்ளியில் மூட நம்பிக்கை பிரச்சாரத்தை நடத்த மேலாண்மைக்குழு அனுமதிக்காது. ஆட்சியரை சந்திப்போம்! எஸ்எம்சி தலைவர், உறுப்பினர்களிடம் பள்ளிக் கல்வித் துறை விசாரித்தது. குற்றச்சாட்டை ஒவ்வொரு வரும் மறுத்துள்ளோம். எஸ்எம்சி மீதான குற்றச் சாட்டு குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். மூட நம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற இருப்பது முன்பே தெரிந்திருந்தால் தடுத்திருப்போம். மூட நம்பிக்கை பிரச்சாரம் நடத்த அவரை அழைத்து வந்த வர்கள் மீது அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் எஸ்எம்சி-க்கு ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி உள்ளனர். அந்தக் குழுவை அட்மின் மட்டும் (தலைமை ஆசிரியர், ஆசிரியர்) பயன்படுத்தும் வகையில் முடக்கி வைத்துள் ளனர். எஸ்எம்சி-யின் தலை வரை அட்மினாக கூட வைக்க மறுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறி னார்.