கரூர், ஆக.17- 77-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை யொட்டி கரூரில் சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் “விடியலை நோக்கி” கலைவிழா குளித் தலை சுங்ககேட்டில் நடைபெற்றது. கலை விழாவிற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சி.முருகேசன். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கா.கந்த சாமி, விதொச மாவட்டச் செயலாளர் பி. ராஜூ, கே.சக்திவேல், குளித்தலை ஒன்றி யச் செயலாளர் இரா.முத்துசெல்லம் ஆகி யோர் கருத்துரை வழங்கினர். சிஐடியு நிர்வாகிகள் ராஜாமுஹமது, சுப்பிரமணி யன், கண்ணதாசன், சரவணன், ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஆறுமுகம், சுப்பிரமணியன், தர்மலிங்கம் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் 77 ஆவது சுதந்திர தின விழா மாநகர் செயலாளர் எம்.தண்ட பாணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தேசி யக்கொடியை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்பி.ஜீவானந்தம், ஆர். ஹோச்சுமின், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ப.சரவணன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் சதீஷ், சுரேஷ், சக்திவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.