சென்னை, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்திய தண்ணீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகளை கலந்து அசுத்தம் செய்துள்ளது தொடர்பாக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதத்தில் மா.சின்னதுரை பேசியது வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிமன்றத்திலுள்ள வேங்கை வயல் என்கிற கிராமத்தில் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியி லுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த செய்தி டிசம்பர் 26 அன்று வெளிவந்தது. அந்தப் பகுதி கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள் வருகிறது என்கிற அடிப்படையில் உடனடியாக நீங்கள் வாருங்கள் என்ற தகவலும் எனக்கு வந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த கிராமத்திற்கு சென்று, தொழிலாளர்களை அந்த டேங்கில் ஏறி பார்க்கச் சொன்ன போது அந்தத் டேங்கில் மலம் கிடப்பதை பார்த்து வீடியோ எடுத்து கீழே அனுப்பினார்கள். டிசம்பர் 26 அன்று அந்த டேங்கில் இருந்த தண்ணீர் வழங்குவது துண்டிக்கப்பட்டு, புதிய டேங்க் வழி யாக தண்ணீர் வழங்கப்பட்டு வரு கிறது. பைப் லைன் புதிதாக மாற்றி யமைக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில், புதிதாக பைப் லைன்கள் மாற்றி அமைக்கப்பட்டு அதன் வழியாக தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மறுநாள், மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல்துறை அதிகாரி களுடன் நானும் அந்த கிராமத்திற்கு சென்று, பொதுமக்களை சந்தித் தோம். அப்போது தங்க ளுக்கு என்ன குறைகள் இருக்கின் றன என்று கேட்டோம். அங்குள்ள கோவிலில் எங்களுக்கு வழிபாடு செய்ய உரிமை இல்லை. டீ கிளாஸ் பிரச்சனை இருக்கிறது என்று தெரிவித்தனர். இதில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய தலையீடு செய்து நடவடிக் கையும் எடுத்தது. அடுத்த நாள், இந்த பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த அனைத்து பகுதி மக்களையும் ஒன்றாக அழைத்து வைத்தோம். பேச்சு நடத்தினோம். ஒரு சுமூகமான தீர்வை கொண்டு வந்து, சமத்துவ பொங்கல் வைக்க முயற்சித்தோம்.
அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் அமைச்சர், குடி தண்ணீரில் மலம் கலந்த குற்றவாளி கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கும் உறுதியான தலையீடு செய்வோம். தமிழ்நாடு அரசு தலையீடு செய்யும். முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று சொன்னதும் கிராம மக்கள் ஒற்றுமையுடன் சமாதானம் அடைந்தனர். ஆனால், அந்த சம்பவம் நடந்து பத்து தினங்களாகியும் மலம் கலந்த குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை. இதனால், அங்கே பல்வேறு அமைப்புகள் செல்கின் றன. அதனால் அங்கு ஒரு பதற்ற மான சூழல் நிலவுகிறது. எனவே, உடனடியாக தலையிட்டு, மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.