tamilnadu

img

50 ஆண்டு இசைப் பயணத்திற்கான அங்கீகாரம்

புதுச்சேரி, மார்ச் 20- 50 ஆண்டு இசைப்பயணத்தின் வெளிபாடாகவே இசை அறிஞர் விருது கிடைத்துள்ளது என்று முனை வர் அரிமளம் பத்மநாபன் தெரிவித் தார். சென்னை மியூசிக் அகாடமியின் இசை அறிஞர் விருது அறிவிக்கப் பட்டுள்ள முனைவர் அரிமளம் பத்ம நாபனை சந்தித்து பேசிய போது, ‘‘எழுத்து எமக்குத் தொழில் என்று பாரதி கூறியது போல் இசை எனது தொழில். இந்த விருது அறிவித்திருப் பதன் மூலம் 50 ஆண்டு இசைப்பய ணத்தின் பெரிய மனநிறைவோடு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ள மகிழ்ச்சி ஏற்படுகிறது. 2005ல் எனக்கு இது ஒரு கனவாக இருந்தது என்றார். சிறுவயதிலேயே 1967 ஆம் ஆண்டு மேடையில் திருவையாறு, தியாகராஜ ஆராதனையில் பாடினேன். அன்றைக்கு யாரும் அவ்வளவு எளிதாக மேடையில் பாட  முடியாது. இசையின் மீது பற்று இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

10 வயதிலேயே அகில இந்திய வானொலியில் பங்கேற்று பாடிய அனுபவம், பள்ளி படிக்கும்போதே மேடைகளில் பாடி பரிசுகள் பெற்ற  அனுபவம் ஆகியவைதான் மியூசிக் அகாடமியில் பங்கேற்க தூண்டு கோலாக அமைந்தன. இன்னும் தமிழ் இசையில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த விருது ஊக்கம் அளித்துள்ளது’’ என்றார்.  ‘‘தவத்திரு சங்கரதாஸ் சுவாமி களின் நாடகங்களில் இசைக் கூறு கள்” என்னும் தலைப்பில் மியூசிக் அகாடமியில் உரையாற்றியதையும் அதனை அப்படியே தமிழிலேயே கட்டுரையாக்கி மியூசிக் அகாடமி இதழில் வெளியிட்டதையும் பெருமை யுடன் நினைவுகூர்ந்தார்.  சென்னை மியூசிக் அகாடமி யின் இசை அறிஞர் விருது அறி விக்கப்பட்டுள்ள முனைவர் அரிமளம் பத்மநாபன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த அரிமளம் என்னும்  சிற்றூரில் 1951-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் நாள் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தார். அக்காலத்து  இசையுலகில் நன்கு  அறியப்பட்ட ‘அரிமளம் சகோ தரர்கள்’ என்னும் இருவரில் மூத்தவ ரான சங்கீத வித்வான் அரிமளம் பி.எஸ்.வி.சுப்பிரமணியம் இவரது தந்தையார்; தாயார் மங்களம் அம்மை யார். இசையைத் தம் தந்தை யாரிடமே கற்றார்.

1977 ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் இசை ஆசிரியராகப் பணியேற்றது முதல் இன்று வரை தம் தமிழாய்வுப் பணிகளையும் இசைப் பணிகளை யும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழ கத்தில் ‘‘தவத்திரு சங்கரதாஸ் சுவாமி களின் நாடகங்களில் இசைக் கூறுகள்’’ என்னும் தலைப்பில் தமிழ்  மரபுவழி நாடக இசையில் ஆய்வு மேற்கொண்டு 1998-ஆம் ஆண்டில் முனைவர்  பட்டம் பெற்றார். தொல்காப்பியம், சங்க இலக்கி யம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் நூல்களை அடிப்படை யாகக் கொண்டு இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் புதிய தேடல்கள் வாயிலாக முத்தமிழிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரு கிறார். புதுச்சேரி அரசு இவருக்குத் தமிழ் மாமணி, கலைமாமணி விருது கள் வழங்கியும், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் விபுலானந்தர் விருது வழங்கியும் கவுரவித்துள்ளன. சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி தற்போது இசை அறிஞர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. 

சந்திப்பு: முருகன்