tamilnadu

img

வீரமுண்டு, வெற்றியுண்டு, விளையாடும் களமிங்கே உண்டு... - ஸ்ரீராமுலு

“உலகை மாற்றும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. அதை தூண்டும் ஆற்றல் இதற்கு உண்டு. இளைஞர்களுக்கு புரியும் மொழியில் பேசுவதால் மக்களை ஒன்றுபடுத்தும் வல்லமையும் இதற்கு உண்டு.

-நெல்சன் மண்டேலா.
 

உலகெங்கிலும் உள்ள பழங்குடி இன குழுக்  களைச் சேர்ந்த வில்லாளர்கள், மல்யுத்த வீரர்கள்  மற்றும் ஓட்டப்பந்தயம், நீச்சல், கால்பந்து, ஈட்டி  எறிதல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்களுக்கான உலகின் முதல் சுதேசி விளையாட்டுப் போட்டிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில் நாட்டின் அமேசான் நகரமான பால்  மாசில் 10 நாட்கள் நடைபெற்றது. இதில் நியூசி லாந்து, ரஷ்யா நாடுகள் முதல் முறையாக இணைந்தன. இது ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல, பாரம்பரிய, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மிகப்பெரிய திருவிழா என்று சொல்லும் அள வுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 20 நாடுகளில்  இருந்து பழங்குடியின வீரர்கள் பங்கேற்ற இதில்  பழங்கால விளையாட்டுகள் மட்டுமின்றி நவீன விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.

அழியாத முத்திரைகள்!

தனது சொந்த மண்ணான சிட்னி ஒலிம்பிக் விளையாட்டில் முதல் தங்கப்பதக்கம் வென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் கேத்தி ஃப்ரீ மேன். இவர், புகாமன் என்கிற ஆதி பூர்வகுடி சமூ கத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்தவர். எட்டு வயதில் பள்ளி தடகள சாம்பியன் போட்டியில் முதல் தங்கம் வென்றவர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பாம் தீவில் வசித்த அவர், தடகளத்தில் 16 வயதில் காமன்வெல்த் விளையாட்டில் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ‘தங்கப் பதக்கம்’, தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதற்கு பிறகும் மூன்று முறை தங்கப் பதக்கமும் வென்று அசத்தினார். உலகச் சாம்பியன்ஷிப் தடகளத்தில் இரண்டு  தங்கம், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு விடியலை ஏற்படுத்தினார். இதனால், சிட்னியில் ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்து ஆஸ்திரேலியா மற்றும் பழங்குடியின மக்களின் கொடியை தனது கரங்களில் ஏந்தி செல்லும் உயரிய கவுரவமும் கிடைத்தது.

மணிப்பூரின் மாணிக்கம்

குத்துச்சண்டை உலகில் ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு முறை சாம்பியன் பட்டம் தங்கம்  வென்று கொடுத்த தன்னிகரில்லா தங்கத் தாரகை  மேரி கோம். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அவ ரது பயணம் பழங்குடியின வீரர்களுக்கு முன்னு தாரணம் என்றால் அது மிகையல்ல. ஒரு பெண் என்பதாலும் பழங்குடி இனத்தில்  பிறந்தவர் என்பதாலும் சிறு வயது முதல் அவ ருக்கு சமூக மற்றும் கலாச்சாரத் தடைகள் ஏராளம்  ஏராளம். அவை அனைத்தையும் உறுதியாக எதிர்கொண்டார். குத்துச்சண்டை என்பது ஆண்  களுக்கானது என்ற கருத்தை தனது திறமையின்  மூலம் உடைத்தெறிந்தார். முழுக்க முழுக்க  அதுவே அவரது சாதனைகளுக்கு தூண்டுகோலாகஇருந்தது. விளையாட்டு உலகில் பழங்குடியின மக்க ளுக்கு இவர்தான் எழுச்சி நாயகி!

தலைமுறைகளைத் தாண்டிய சாதனை!

பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த ஜெயபால் சிங், இன்றைய  ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். விடுதலைக்கு முன்பு  இந்திய ஹாக்கி அணியை வழி நடத்திய இவரும் பழங்குடி யினர். 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். மிகச் சிறந்த எழுத்தாளரான இவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவரைப் போல இந்திய ஹாக்கி அணியில் இடம்  பிடித்து உலகிலேயே அதிக ஆட்டத்தில் (403) விளையாடி யவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒடிசாவின் திலீப் டிர்கி. ஜார்க்கண்ட் மாநில எல்லையை உள்ள ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தவர்கள் பிரேந்திரா லக்ரா, சகோதரர் பிமல், சகோதரி அசுந்தா மூவ ரும் இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்கள். வில்வித்தை போட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த மாநிலத்தைச் சார்ந்த தீபிகா குமாரி ஒரு சகாப்தத்திற்கு மேலாக ஏராளமான சாதனைகள் படைத்தவர். அவரது வழித்தோன்றலான கோமாலிகா உலக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். தனது மகள் நாட்டுக்காக பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் ஒரு பகுதியை விற்றுச் செலவழித்தவர் அவரது தந்தை.

இந்தியாவின் முகங்கள்....

இந்தியாவில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும்  விச்சாப்பூர் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் கால்பந்து விளை யாடி வருகின்றனர். அதிலும் அதிகமாக பெண்கள் விளை யாடி வருகின்றனர். வீராங்கனை லட்சுமி ஒன்பது முறை  தேசிய அணியில் விளையாடி இருக்கிறார். இவருடன் 25 முதல்  30 வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடி ஏராளமான சாதனைகள் படைத்துள்ளனர். ஆனால், 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் பாஜக  அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பது வேதனை யிலும் வேதனை. கேரளாவின் வயநாடு சோயி மூலா பகுதியில் பிறந்தவர்  மின்னு மணி. இவரது தந்தை சி.கே.மணி ஒரு கூலித் தொழி லாளி. அம்மா வசந்தா வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்.  குறிச்சி என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கி திருவனந்தபுரம் அரசு கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். தடகளத்தில்  ஆர்வமாகப் கலந்து கொண்டு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஓட்டப்பந்தயங்களில் பரிசுகள் குவித்தவர். தனது தம்பி உள்ளிட்ட சிறுவர்களுடன் வயல்வெளியில் விளையாட்டாக கிரிக்கெட் மட்டையை பிடித்தார். அதுவே பிறகு பழகிப் போனதால் கிரிக்கெட் பக்கம் திரும்பினார். பள்ளி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாலும் முறை யான பயிற்சிக்குச் செல்ல வசதி வாய்ப்புகள் இல்லை. அவ ரது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அனைத்து செலவுகளை யும் ஏற்றுக் கொண்டு பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். 16 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியில் இடம் பிடித்து  கேரளா அணிக்காக விளையாடியது மட்டுமல்ல அவருக்கு  கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக, கேரளாவில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல்  வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தமானார். வங்க தேசத்துக்கு எதிராக களம் இறங்கினார். தான் வீசிய முதல்  ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி உலக அளவில் பேசப்படும்  வீராங்கனையாக உருவெடுத்தார் 23 வயதான மின்னு மணி.

மீனவ குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையா கவே நீச்சலில் எப்படி திறமை அதிகம் இருக்குமோ? அதைப்  போலத்தான் பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர்கள் வில்வித்தை, ஈட்டி எறிதல், மல்யுத்தம் போன்றவற்றில் இயற்கையாகவே திறமைகள் அதிகம் இருக்கும். இயல்பான வேகம், சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு மற்றும்  அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். மிகவும் கடினமான  நாட்களில் கூட தங்கள் ஆற்றலை இழக்காமல் விளையாடும்  அசாத்திய திறமை பெற்றவர்கள். பழங்குடியின சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு திறமை யாளரையும் அடையாளம் காண வேண்டும். அவர்களது முழு திறனையும் வெளிக்கொண்டு வருவதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பழங்குடியினர் பகுதிகளில் விளையாட்டு கல்விக்கூடங் கள், பயிற்சி மையங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்க  வேண்டும். இதன் மூலம் உலகின் மிகச் சிறந்த விளை யாட்டு வீரர்களை உருவாக்க முடியும்.