கண்ணூர், மார்ச் 17- கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 6 முதல் 10 வரை நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக 26 கருத்தரங்குகளை கட்சி நடத்துகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி நடை பெறும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பினராயிவிஜ யனுடன் பங்கேற்கிறார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமசும் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலா ளர் எம்.வி.ஜெயராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ‘சமூக முன் னேற்றத்தில் நூலகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் முதல் கருத்தரங்கும் அதைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளிலும் கருத்தரங்கம் நடக்கிறது.
அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு உரையாடுவதே கருத்தரங்கின் நோக்கம். இந்த கருத்தரங்குகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் எம்.பி, கே.வி.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கலாச்சார நிகழ்வுகளில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், கவிஞர் சச்சிதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.