நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மாற்று இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கம்மாபுரத்தில் சனிக்கிழமை (ஜூன் 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். (செய்தி 3 ஆம் பக்கம்)