tamilnadu

அரசுப் பணியில் 99 பேர் நியமனம்

சென்னை, ஜன.3- தமிழ்நாட்டில் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 99 நபர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகளை வழங்கும் அடையாளமாக 3 உதவி இயக்குநர்கள் மற்றும் 7 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன உத்தரவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திங்களன்று(ஜன.3) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பி வருமாறு:- குழந்தைகள், மகளிர், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்ற  சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் மற்றும் மகளிர்  உரிமைத் துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன.

இத்துறையின் சமூக நலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவில் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்களும், வட்டார அளவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. அதன்  தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி  இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டவர்க ளுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செய லாளர் முனைவர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு  கல்லோலிகர் மற்றும் அரசு உயர்  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.