தஞ்சாவூர், ஜன.22 - மழையால் சேதமடைந்த நெற் பயிர்களுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனர். தஞ்சாவூர் அருகேயுள்ள சித்திரக் குடி, ராயந்தூர், குணமங்கலம், வைரப் பெருமாள்பட்டி, புதுக்கல்விராயன் பேட்டை, பழைய கல்விராயன் பேட்டை, மருதக்குடி உள்ளிட்ட பகுதி களில் கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராகி வந்த சம்பா பருவ நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இப்பயிர்களை இப்பகுதி விவசா யிகள் சுமார் 40 பேர் புதன்கிழமை ஏந்தி வந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் முறையிட்டனர். அப்போது, சித்திரக்குடி விவசாயி கனகராஜன் கூறுகையில், “ஒரு மாதத் துக்கு முன்பு பலத்த மழை பெய்ததால், சம்பா பருவ நெற் பயிர்கள் பாதிக்கப் பட்டன. முளைத்து வந்த கதிர்கள் அனைத்தும் பதராக உள்ளன. அதிலும் எடைப்பழம் என்கிற பூஞ்சாண நோய் தாக்கப்பட்டு, 50 சதவீதம் பாதிக்கப் பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரி டம் ஒரு மாதத்துக்கு முன்பாக மனு அளித்து முறையிட்டோம். ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கை யும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அனைத்து பயிர்களும் முழுமையாக அடியோடு சாய்ந்துவிட்டன. ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவு செய்துள்ளோம். இதை அரசு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பயிர் காப்பீடும் வழங்க வேண்டும். அதற்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும். நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு செய்கிறது. ஈரப்பதத் துக்கு மட்டுமல்லாமல், வயல்களில் சாய்ந்துள்ள பயிர்களையும் கள ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அவர்களை வேளாண்துறை அலுவலர்களும் அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும்” என்றார். அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், வைரபெருமாள்பட்டி வி.எஸ். முருகானந்தம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.