திருவள்ளூர், ஆக.22- அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களில் குடியிருக்கும் குடிசை வாழ் மக்களின் வீட்டு வரியை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் உத்த ரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (ஆக. 22), சோழவரம் பிடிஒ அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களில் கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக குடிசைகள் அமைத்து பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வ ளவு காலமாக ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரியை கடந்த 2022 ஆம் ஆண்டு வரை வசூலித்து வந்தது. இவர்களுக்கு அரசு வழங்கியுள்ள ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று வீட்டு வரி செலுத்தி இலவச வீட்டுமனையை போராடி பெற்று வந்தனர். இந்த நிலை யில் திடீரென தமிழ்நாடு அரசு வீட்டு வரியை அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களில் குடியிருக் கும் மக்களிடம் வரி வசூலை ஏற்க மறுக் கும் உத்தரவை வெளியிட்டுள்ளது இந்த சூழலில் திருவள்ளூர் மாவட்ட த்தில் உள்ள ஊராட்சி நிர்வாகங்கள் அரசு புறம்போக்கில், கோயில் நிலங்க ளில் குடியிருப்போரிடம் வீட்டு வரியை ஏற்க மறுத்துள்ளன. ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்த வேண்டும் என்றால் வீட்டு மனை பட்டா இருந்தால் மட்டுமே ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும். பட்டா இல்லை என்றால் மனு நிராகரி க்கப்படும். குடிமனை பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் இந்த செய்தி ஏழை, எளிய மக்களின் தலை யில் பேரிடியாக இறங்கியுள்ளது. குடி மனை பட்டா பெற்றால், அனைவருக் கும் வீடு வழங்கும் திட்டத்தில் தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள், அரசு நலத்திட் டங்கள், உதவிகள் பெற முடியும். அதற்கு வீட்டு வரி ரசீது அவசியம்.
இதனை தொடர்ந்து வழக்கம் போல அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களிடம் வீட்டு வரியை ஊராட்சி நிர்வாகங்கள் ஏற்க வேண்டும், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆணையை திரும்ப பெற வேண்டும், மனு கொடுத்து காத்திருக்கும் அனை வருக்கும் இலவச வீட்டுமனை பட்டாக் களை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (ஆக-22), சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சோழவரம் ஒன்றியம் அல மாதி, எடப்பாளையம், எஸ்.பி.கே.நகர், பூதூர், ஞாயிறு ஆகிய ஊராட்சிக ளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் தலைமை தாங்கினார்.இதில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சி.மனோகரன், செயலாளர் டி.சரளா, பொருளாளர் இ.ரவி, துணைச் செயலாளர் வி.ஜெயகுமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லை யன், பொது தொழிலாளர்கள் சங்கத் தின் வட்டார தலைவர் ஏ.நடராஜன் ஆகி யோர் பேசினர். மனுவை பெற்றுக் கொண்ட சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக் கப்படும் என்றார்.