tamilnadu

img

மாற்றுத் திறனாளி இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளி இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

நாகப்பட்டினம், ஆக.27 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் கோடியக்கரை அண்ணா நகரில்  கந்தசாமி (25) என்ற மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத் தில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சர் படம் மழையால் கிழிந்துவிட்டது.  இந்நிலையில், ஏன் முதலமைச்சர் படம் ஒட்டவில்லை என்று கேட்டு கந்தசாமியை முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கே.பி.லட்சுமணன் செவ்வாயன்று கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து கந்தசாமியின் தந்தை மணியன் குடும்பத் தினர் கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர் எம்.சுப்பிரமணியத்திடம் சென்று முறை யிட்டனர்.  பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள், எங்களை  கேள்வி கேட்பதா என்ற கோபத்துடன், செவ்வா யன்று இரவு 10 மணியளவில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் இராஜேஸ்வரி, இராஜேந்திரன் ஆகி யோரின் வீட்டிற்குள் புகுந்து 10-க்கும் மேற்பட் டோரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் முன்னாள்  ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணிய னின் தூண்டுதலால் நடந்ததாக தெரிகிறது.  தாக்கு தலுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி கந்தசாமி,  இராஜேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோர் சிகிச் சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை புதனன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்ப ழகன், மாவட்டச் செயலாளர் ஏ.ராஜா, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  ப.சுபாஷ் சந்திரபோஸ், கே.சித்தார்த்தன், வேதாரண் யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி,  ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜமாணிக் கம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயற்குழு உறுப் பினர் வி.மீனாட்சிசுந்தரம், மாதர் சங்க வேதாரண் யம் ஒன்றியச் செயலாளர் எம்.சுமதி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.  பின்னர் வேதாரண்யம் காவல் நிலையம் சென்று விசாரித்த போது, சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம், கோடியக்கரை தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன் வலியுறுத்தினார்.