tamilnadu

img

டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி விவசாயிகள், பெண்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

மதுரை,  ஜன.8- மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, நர சிங்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப் பதற்கு ஒன்றிய அரசின் கனிமவளத் துறை சார்பில் வேதாந்தாவின் துணை நிறுவனமாக இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து  செய்ய கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து பல்வேறு போராட்டங் கள் நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக செவ்வா யன்று மதுரை மேலூர் முல்லைப் பெரி யாறு, ஒரு போக பாசன விவசாயி கள் சங்கத்தின் சார்பில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி  மேலூர் தெற்குத்தெரு பகுதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகள், இளைஞர்கள் பெண்கள் பேர ணியாக நரசிங்கம்பட்டி பகுதியில் கூடி யிருந்த விவசாயிகளோடு சேர்ந்து மதுரை மேலூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபயணம் மேற்கொண்டனர். இதேபோன்று மேலூரின் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், சிறிய ரக லாரி களிலும் வருகை தந்தனர். இதனால் மதுரை மேலூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மதுரை தமுக்கம் தலைமை தபால் நிலையம் நோக்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபய ணம் மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடை யை மீறி வந்த விவசாயிகளை காவல்துறையினர் வெள்ளரிபட்டி மற்றும் சிட்டம்பட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தடுக்க முற்பட்ட னர். ஆனாலும் பேரணி தொடர்ந்து நடைபெற்றது. இதனையடுத்து மதுரை மாநகர்  பகுதியில் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் சிறிய லாரிகளில் சாரை சாரையாக அணிவகுத்த 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி கள், பெண்கள் தமுக்கத்தில் காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறை அனுமதியை மீறி பேரணியாக தமுக்கத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்துறை சார்பில் புதனன்று 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.