பாசிச எதிர்ப்பு தின பிரச்சார இயக்கம்
நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு
நாகப்பட்டினம், மே 10- ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்திய சோவியத் செஞ்சேனை வெற்றியின் 80 ஆம் ஆண்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. சிபிஐஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில், பத்தாளபேட்டையில் பாசிச எதிர்ப்பு இயக்கம் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தெய்வநீதி, கணேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மூத்த தோழர் முருகேசன் மேகநாதன், ஜோதி, ரவி, கமலா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், சித்ரா, கருணாநிதி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர் அமீர் நன்றி கூறினார். மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாசிச ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜூ தலைமை தாங்கினார். பிரச்சாரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் பாசிசத்திற்கு எதிராக, ஹிட்லர் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைத்த சோவியத் ரஷ்யாவின் எழுச்சிமிகு வெற்றியை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் பாசிச எதிர்ப்பு தின பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண் பாண்டியன் தலைமை வகித்தார். ஆண்டிமடம் வட்டச் செயலாளர் எம். வேல்முருகன், தா. பழூர் ஒன்றிய செயலாளர் விஜய் ராதாகிருஷ்ணன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கத்திற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிலம்பரசன், எம். சந்தானம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.