அதிமுக பொதுக்குழு வில் இருந்து வெளி யேறிய ஒ.பன்னீர செல்வம் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பதவி வெறியில் நடந்தது பொதுக்குழுவே அல்ல, அரை மணி நேரம் நடந்த ஓரங்க நாடகம். பொதுக்குழுவில் பொய்யாக கை யெழுத்திட்டு காட்டுமிராண்டித்தன மாக நடந்துகொண்டுள்ளனர். புதி தாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க.வின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர் பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம்.
அவைத்தலைவர் தேர்வு செல்லாது
அதிமுக பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை அவைத் தலைவரை ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பா ளர்தான் தேர்வு செய்ய முடியும். அதி முக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது. பொதுக் குழுவை கூட்டுவதற்கு அவைத் தலை வருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கி ணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்துள்ளது. அதை மீறி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளனர்.
கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள்
23 தீர்மானங்கள்தான் நிறை வேற்ற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு கூறிய நிலையில், அதையும் மீறி தீர்மா னம் போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக் குழுவில் கூச்சல் போட்ட வர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல, கூலிக்கு அழைத்து வரப்பட்ட வர்கள். தீர்மானங்கள் ரத்து செய்யப் பட்டதால், பொதுக்குழுவே செல்லாத கூட்டமாகிவிட்டது.
போலி கையெழுத்து
பொதுக்குழு உறுப்பினர்கள் கை யெழுத்து போட்டதாக சொல்லப் பட்ட கடிதம் உண்மையானது அல்ல; போலியாக பலர் கையெழுத்து போட்டுள்ளனர். அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம். கட்சி யின் நலன்கருதி ஓ.பன்னீர் செல்வம் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார்.அதற்கு அவர்கள் தான் ஒத்து வரவேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை, ஜூன் 23- அதிமுகவில் இரு கோஷ்டிகளின் உச்சக்கட்ட மோதல் காரணமாக பொதுக் குழு பாதியிலேயே முடிவடைந்தது. மீண் டும் அடுத்தமாதம் 11 ஆம் தேதி பொதுக் குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோஷம் சமீபத்தில் எழுந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில் வியாழனன்று (ஜூன் 23) அக்கட்சியின் பொதுக்குழு கூட் டம் சென்னை வானகரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ராம் குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப் பினர் சண்முகம் ஆகியோர் உயர்நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணசாமி, திட்டமிட்டபடி பொதுக் குழு நடத்தவும் தீர்மானங்கள் நிறை வேற்றவும் அனுமதி அளித்தனர்.
ஒற்றை நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை துரை சாமி, சுந்தர் மோகன் ஆகிய இரண்டு நீதி பதிகள் அடங்கிய அமர்வு அவசர வழக் காக ஏற்று புதன்கிழமை இரவு விடிய விடிய விசாரணை நடத்தியது. பின்னர் அதிகாலை அளித்த தீர்ப்பில், “பொதுக் குழு நடத்த தடையில்லை. ஆனால் செயற்குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க லாமே தவிர எந்த முடிவும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டனர். இதனால் ஒற்றைத் தலைமை குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனது. அறிவித்தபடி, வியாழனன்று காலை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் நடைபெற் றது. பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை ஆகியவற்றை வைத்திருந்த உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழு வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பு அங்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நோக்கி ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், பன்னீர்செல்வத்தை வெளியேறக் கோரியும் சிலர் முழக்கமிட்ட னர். முன்னாள் அமைச்சர்கள் யாரும் பன் னீர் செல்வத்தை வரவேற்கவில்லை. அவ ரது ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடை யில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண் டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கி னார்.
கூட்டம் துவங்கியவுடன் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் பெயரை ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந் தார். அதை எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்தார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, கூட்டத்தில் நிறை வேற்ற திட்டமிடப்பட்டிருந்த 23 தீர்மா னங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன் மொழிந்து, இபிஎஸ் வழிமொழிந்த நிலை யில், திடீரென மேடையில் பேசிய சி.வி. சண்முகமும், துணை ஒருங்கிணைப்பா ளர் கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மா னங்களையும் நிராகரிக்கிறோம் என்று கூறினார். இரட்டை தலைமையால் அதி முக தீவிரமாக செயல்பட முடியவில்லை. எனவே வலிமையான, வீரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை நடப்பு பொதுக்குழுவிலே தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் ஒற்றைத் தலைமை வேண்டும், இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒரே தலைமையின்கீழ் கொண்டு வருவது பற்றி இங்கு விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியையும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத் திட்ட கடிதத்தை அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனி டம் சி.வி.சண்முகம் வழங்கினார்.
இதனிடையே, பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. அப்போது வைத்தி லிங்கம், சட்டத்துக்கு புறம்பாக நடை பெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம் என்று பேசியதோடு ஓபிஎஸ்-க்கு ஆதர வாக கோஷம் எழுப்பினார். இதனிடையே, ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு வில் இருந்து வெளியேறினர். அவர் களோடு மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது ஓபிஎஸ் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களையும், காகிதங் களையும் வீசினர். இதற்கிடையே அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 காலை 9.15 மணிக்கு நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். முன்னதாக பொதுக்குழு கூட்டம் கூடு வதை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க பலத்த காவல் துறை