டோக்கியோ, ஜன.9- ஜப்பான் நாடாளுமன்றத் தேர்த லில் ஏற்படுத்தப்பட்ட எதிர்க்கட்சிகளு டனான கூட்டணியில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி தொடரும் என்று அக்கட்சியின் துணைத்தலைவர் தமுரா டோமோகோ உறுதியளித்து ள்ளார். புத்தாண்டிற்கான வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொண்டு இணை யதள வானொலியில் உரையாற்றுகை யிலேயே அவர் இதைக் குறிப்பிட் டார். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி தோல்வி யடைந்துவிட்டதால், கூட்டணி தேவையில்லை என்ற கருத்துக்களை அவர் நிராகரித்தார். ஒருவேளை கூட்டணி ஏற்படாமல் இருந்திருந்தால் தேர்தல் முடிவுகள் படுமோசமாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அரசின் கொள்கை களுக்கு எதிராகக் கூட்டான போராட்டங் களை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறது. அதோடு, ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டாளி களின் பலம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டியுள்ளது. அதனால் வர விருக்கும் மேலவைத் தேர்தலில் தற்போதுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணி தொடர வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட முயற்சிகளே ஆளும் கட்சியின் மக்கள் விரோதக் கொள்கை களைத் தடுக்கும் என்றும் அவர் கூறினார். அக்டோபர் 2021ல் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பற்றிப் பேசிய தமுரா டொமோகோ, “கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து, பொது வான கொள்கைகளை இறுதிப்படுத்தி விட்டு தேர்தல் களத்தில் இறங்கிப் பணி யாற்ற ஒருமாத காலம் மட்டுமே இருந்தது. கூட்டணி வேட்பாளர் களுக்கும். பொதுவான கொள்கை களுக்கும் ஆதரவு திரட்டுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. அந்த அனுபவங்களைக் கொண்டு பார்த்தால், மக்கள் விரோத அரசை அகற்ற வேண்டுமென்றால் எதிர்க்கட்சி களின் இணைந்த செயல்பாடு அவசியம்” என்றார். இது குறித்து எதிர்க்கட்சிகளோடு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது. ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது என்பதை கட்சி உணர்ந்துள்ளதாகக் கூறிய தமுரா டொமோகோ, “ஜப்பா னை நெருக்கடியில் தள்ளும் பல்வேறு அம்சங்களை அரசியலமைப்பு சட்டத் தில் இணைக்கும் முயற்சிகளைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.