சென்னை,மே 29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து, பழுது நீக்கி மேம்படுத்தி ஆலையில் கரும்பு அரவை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகி யோர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச் சாமி, மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன், எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ., சிபிஎம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்க டேசன், கரும்பு சங்க நிர்வாகிகள் என்.ஸ்டா லின்குமார், தனசேகர், முருகன் ஆகியோர் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அமைச்சர் மூர்த்தி, கரும்பு சங்க நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் வேளாண்துறை அமைச் சரை சந்தித்து அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு ஆலையை திறந்து செயல்ப டுத்திட கோரி மனு அளித்து முறையிட்டனர்.
அலங்காநல்லூர் கூட்டுறவு ஆலைக்குட் பட்ட பகுதியில்கரும்பு சாகுபடியை விவசாயி கள் அதிகப்படுத்தி வருகின்றனர். நெல் உள்ளிட்ட தானியங்களுக்கு அரசு அறிவித்த விலைகிடைக்காதது, போன்ற பல காரணங்களினால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றார் கள். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பெருக்கு அலுவலர்கள், (சிஓ) களப்பணியாளர்கள் (சிஏ) இல்லை. தேவை யான எண்ணிக்கையில் ஊழியர்களை, அதிகாரிகளை நியமனம் செய்திட வேண்டும். வரும் ஆண்டிலேயே ஆலையை திறந்திட தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் கடந்த ஆட்சியில் பணியை துவங்கி கிடப்பிலே போடப்பட்டுள்ள இணை மின்சார உற்பத்தி திட்டப்பணிகளை முடித்து மின்சார உற்பத்தியை துவங்கிட வேண்டும் என்று மனு வில் கோரப்பட்டிருந்தது. முழு விவரங்களையும் கேட்ட வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர், ஏற்கனவே அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு ஆலை யை திறந்து செயல்படுத்திட ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தோம். முழு மையாக ஆய்வு செய்து சர்க்கரை ஆலையை திறந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக் கப்படும். உடனடியாக மாநில அதிகாரி களுடனான கூட்டத்தை நடத்தி ஆலையை திறப்பது குறித்தும், விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்திடும் வகையில் அறி விப்பு வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக ரவீந்திரன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.