சென்னை, மே 7- அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரைக்கும் படிக்கும் மாணவர்களுக்கு தின மும் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, தமிழக சட்டப்பேரவை யில் 110 ஆவது விதியின் கீழ் புதிய அறிவிப்பு களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், “நகரம் மற்றும் கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலை யிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூர மாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்குக் காரணமாக இருக் கிறது. இதனை மனதில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதற் கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள் ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்”என்றார்.
ஊட்டச்சத்து குறையில்லா தமிழகம்!
ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில் கிடைத்த தகவல் மிக மிக மன வேதனையைத் தருவதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந் தைகளைப் பரிசோதித்ததில் பெரும்பாலா னவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள வர்களாக இருந்தார்கள். வயதுக்கேற்ற எடை யும் இல்லை; வயதுக்கேற்ற உயரமும் இல்லை. மிக, மிக, மெலிந்து இருக்கின்றார்கள். உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர் களது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதால், குழந்தைகளை நல முடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் குழந் தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந் தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் குழந்தைகள் அனை வரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்று வதற்கான திட்டமாக இதனை வடி வமைத்திருப்பதாகவும் முதலமைச் சர் தெரிவித்தார்.
‘தகைசால் பள்ளிகள்’
தில்லி அரசின் சார்பில் நடத்தப் படும் மாதிரிப் பள்ளிகளைப்போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கிட முதற் கட்டமாக 150 கோடி ரூபாய் செல வில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகள் சீரமைக்கப்படும். அனைத்துக் கட்டடங்களும் நவீன மயமாக்கப்படும். மாணவர்களின் ஆளுமைத் திறன் அனைத்தும் மேம் படுத்தப்படும். இந்த வகைப் பள்ளி களைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல் வர் அறிவித்தார்.
அனைவருக்கும் நல்வாழ்வு
நகர்ப்புற மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும் போது மருத்துவமனைகளில் கூட் டம் அதிகமாகி வருகிறது. இந்நிலை யை மாற்றி, ஒருங்கிணைந்த, தர மான மருத்துவ சேவைகளை மக்க ளின் இருப்பிடங்களுக்கு அருகி லேயே வழங்கிடும் நோக்கில், பெரு நகர சென்னை மாநகராட்சி உள் ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நக ராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ நிலையங்களுக்கு ரூ. 180 கோடியே 45 லட்சம் செலவில் சொந்தக் கட்ட டங்கள் கட்டப்படும். இந்த மையங்களில் ஒரு மருத்து வர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளு நர் மற்றும் உதவியாளர் ஆகிய பணி யாளர்கள் நியமிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையி லும் இரு வேளைகளிலும் புறநோயா ளிகள் சேவைகள் செயல்படுத்தப் படும். 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளி லும் நீண்ட காலமாக நிறைவேற்றப் படாத அவசியத் தேவைகளுக்காக ‘உங்கள் தொகுதியில் முதலமைச் சர்’ திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படு கிறது. அந்தந்த சட்டமன்ற உறுப்பி னர்களின் பரிந்துரைகளின் அடிப்ப டையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள்.
அடுத்து வரும் நிதி ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன் னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரும், தங்களுடைய தொகுதி மக்களுடைய தேவை களை அறிந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கியத் திட்டங் கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப் பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங் களை, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முடி வெடுத்துள்ளது. இந்தப் பணிகளுக் காக மட்டும் இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப்படும். இந்தத் திட்டம் நேரடி யாக, என்னுடைய கண்காணிப் பிலே நடைபெறும் என்றும் முத லமைச்சர் ஸ்டாலின் கூறினார்.