சென்னை,பிப்.3- பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி வியாழனன்று(பிப்.3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலை வர்கள் மரியாதை செலுத்தினர், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா நினை விடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்டச் செய லாளர்கள் அமைச்சர் மா.சுப்பிர மணியன், பி.கே. சேகர் பாபு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உளிட்ட பலரும் கலந்து கொண்ட னர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அண்ணா நினைவு நாளில் வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக நடந்து வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். கொரோனா பரவல் உள்ள காரணத்தால் பேரணியாக செல்லாமல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் சென்னை மெரினா கடற்க ரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.