tamilnadu

img

ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

திருவாரூர், செப்.2 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வலங்கைமான் வட்டப் பேரவை திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் நடைபெற்றது. பேரவைக்கு விஐயலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் திரிபுர சுந்தரி  கொடியினை ஏற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி துவக்க வுரையாற்றினார், ஒன்றியச் செயலாளர் ஜெயசித்ரா வேலை அறிக்கையையும், பொருளாளர் சூர்யா வரவு-செலவு அறிக்கை யையும் வாசித்தனர்.  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்  கூட்டணியின் வட்டத் தலைவர் பாலசுந்த ரம், அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பி னர் பா.சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாவட்டச் செயலாளர் அ.பிரேமா புதிய  நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரை யாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். வட்டத் தலைவராக விஜயலெட்சுமி, செயலாளராக ஜெயசித்ரா, பொருளாராக விஜயாஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பின ராக ரெத்தினகுமாரி மற்றும் 10 பேர் கொண்ட  இணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ரூ.9000 வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.