சித்திரை திருவிழாவில் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு, கைக்கிளி, மலர் மாலை ஆகியவை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்தானிகம் ஹயகிரிவாஸ் கொண்டு சென்றார். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.