மதுரை, மார்ச் 8- சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜை சாதி ஆணவக் கொலை செய்த யுவராஜ் உட்பட 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனையான சாகும் வரை ஆயுள் தண்டனையும் மேலும் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 3 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வர் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் நாமக்கல் மாவட்டம் வேறு சமூ கத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காத லித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று கல்லூரிக்குச் செல்வ தாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்ட வாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜ் சடலம் கண்டெடுக்கப் பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப் பட்டிருந்தது. இக்கொடூரச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோகுல்ராஜின் இறப்பு தொடர்பாக துவக்கத்தில் ஆள் காணவில்லை, சந்தேக மரணமாக வழக்கு தொடுக்கப் பட்டது. பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர் உடற் கூராய்வு அறிக்கையின் மூலமாக கொலை செய்யப்பட்டதுதெரியவந்தது. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூரக் கொலை யில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்ன மலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் யுவராஜ் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி யினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். இதன்பின்னரே காவல்துறையினர் யுவராஜை கைது செய்ய தீவிரம் காட்டினர். 11.10.2015 அன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீ சார் கைது செய்தனர்.இதில் ஒருவர் தலைமறைவாக இருந்தார் .
தமிழகத்தை உலுக்கிய சாதி ஆணவப் படுகொலை வழக்கை தீவிர மாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்த மனு வின் அடிப்படையில், நாமக்கல் நீதி மன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலை யில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமார் மார்ச் 5 சனிக்கிழமை யன்று தீர்ப்பளித்தார். அப்போது யுவ ராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். ஒருவர் தலைமறை வாக உள்ளார். நீதிபதி அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்ன மலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவ ராஜ், அருண், குமார் , சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திர சேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்றும் சங்கர் , அருள் செந்தில், செல்வகுமார் ,தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டார். குற்றவாளிகள் 10 பேருக்குமான தண்டனை விபரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்களை மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் மார்ச் 8 செவ்வாய்க்கிழமையன்று மதியம் 2 மணியளவில் அறிவித்தார். முன்னதாக குற்றவாளிகள் பத்து பேரையும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் அழைத்து வந்தனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை 11.10 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். முதல் குற்றவாளி யுவராஜ் தொடங்கி பத்து குற்றவாளி களிடமும் நீதிபதி சம்பத்குமார், இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறி விக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஏதா வது தெரிவிக்க விரும்புகறீர்களா? ஒவ்வொருவரிடமும் தனியாக தனி யாகக் கேட்டார். யுவராஜ், இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்த மில்லை. நான் நிரபராதி என்றார். மற்ற வர்கள் ஒவ்வொருவரும் எனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை. நிரபராதி என்றனர். அவர்களது கருத்துக் களை நீதிபதி பதிவு கொண்டார். இதையடுத்து காலை 11.13 மணிக்கு கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் நீங்கள் ஏதேனும் கூற விரும்பு கிறீர்களா எனக் கேட்டார். அதற்கு சித்ரா, “எனது மகனை கொலை செய்தவர் களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென” கூறினார்.தொடர்ந்து காலை 11.15 மணிக்கு உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட கோகுல்ராஜ் தரப்பு வழக்கறி ஞர் ப.பா.மோகன் நீதிபதியிடம் இறுதி வாதத்தை முன்வைத்தார்.
வழக்கறிஞர் மோகன் கூறுகையில், “ஊரும் சேரியும் ஒன்றாக வேண்டும். சமத்துவம், சமூக நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலை வர்கள் கூறியுள்ளனர். கவிஞர் பாரதி கூட, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றார். ஆனால் இந்தப் படுகொலை அதற்கு நேர் எதிராய் உள்ளது. பிறப்பில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் இல்லை. தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு நீதி, உயர்சாதி என்பவருக்கு ஒரு நீதி என்பது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்க ளும், ஓரங்கட்டப்பட்ட மக்களும் முன்னி லைக்கு வரவேண்டுமென்றே அரசும், நீதி மன்றமும் விரும்புகிறது. மனித சமூகத்திற்கு விரோதமானது இந்தப் படுகொலை” என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சம்பத்குமார் தண்டனை விபரங்களை அறிவித்தார். யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சந்திர சேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவரு க்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட் டோருக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு
தண்டனை அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், சாதி ஆணவப் படுகொலையான கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை மூன்று ஆயுள் தண்டனை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி சம்பத்குமார் வழங்கியுள்ளார். இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக பாடுபட்ட வழக்கறிஞர் ப.பா.மோகன் மற்றும் அவரது குழுவினர் உள்ளிட்ட தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.