tamilnadu

img

காணாமல் போன பழமையான பைபிள் லண்டன் காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர், ஜூலை 2 -  பார்த்தோலோமஸ் சீகன் பால்க் என்ப வர் தென் இந்தியாவின் சிறந்த கிறிஸ்த்துவ மதபோதகர். 1682 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்துபாலே பல்கலைக்கழகத்தில் படித்து லுதரன் தேவாலயத்தில்  மதபோதகராக பணியாற்றினார். டென்மார்க் நாட்டு மன்னரின் வேண்டு கோளை ஏற்று, இவரும் கென்ரிக் என்பவ ரும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தி லுள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த பகுதியில் மதபோதகராக பணிபுரிய கடந்த 1706 ஆம் ஆண்டு இந்தியா வந்தனர். இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படைப்புகளை வெளியிட்டார். இவர் பைபி ளின் “புதிய அத்தியாயத்தை” தமிழில் 1715 ஆம் ஆண்டு மொழி பெயர்த்தார். இவர் 1719 ஆம் ஆண்டு மறைந்தார்.  இந்த தமிழ் மொழிபெயர்ப்பான புதிய அத்தியாயம் மட்டுமல்லாது இரண்டு தேவா லயங்கள் மற்றும் ஒரு பிரார்த்தனை கூடத்தை கட்டியதோடு, 250 க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களுக்கு ஞானஸ்தானமும் வழங்கியுள்ளார்.

சீகன் பால்க் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட ஒரு அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போ தைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த சமயத்தில் வழங்கப்பட்டது. அந்த புத்தகம் பிற்காலத்தில் தமிழக அர சாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ் வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தது. விலைமதிப்பில்லாத இந்த பைபிளா னது காணாமல் போய்விட்டதாக கடந்த 10.10.2005 ஆம் ஆண்டு சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த ஒரு புகாரானது கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த புராதானமான பைபிள் களவு போனது தொடர்பாக கடந்த 17.10.2017 ஆம் ஆண்டு வழக்க றிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற எண்.05/2017, ச/பி 380 இ.த.ச பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வந்தது. வெளிநாட்டிலுள்ள சிலைகள் மற்றும் கலைபொருட்களை விரைந்து மீட்கும் முயற்சியாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு, காவல் துறை இயக்குநர் முனைவர் கி. ஜெயந்த் முரளி, உத்தரவின் பேரில், காவல் துறை தலைவர் முனைவர் இரா.தினகரன் வழிகாட்டுதலின்படி, காணாமல் போன இந்த பைபிளை கண்டுபிடிக்க காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர். பெ.ரவி தலைமையில், ஆய்வாளர் இந்திரா உள்ளிட்டோரை கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. 

இத்தனிப்படையினர் அந்த அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதி வேடுகளை பார்வையிட்ட போது சில வெளி நாட்டினர் கடந்த 07.10.2005 ஆம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது. ஒரு குழுவாக வந்த இவர்கள் மதபோதகர் சீகன் பால்க் அவர்க ளின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக ளுக்காக இங்கேவருகை தந்ததும், சீகன் பால்க் சம்பந்தப்பட்ட இடங்களையும்                    தொண்டாற்றிய நிறுவனங்களையும் பார்வையிடுவதையும் நோக்கமாக கொண்டு வந்ததும் விசாரணையில்தெரிய வந்தது. 

மேலும் இத்தனிப்படையினர் பல்வேறு வெளிநாட்டுஅருங்காட்சியகங்களின் வலைதளங்களை ஆராய்ச்சி செய்ததில் காணாமல் போன 17 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்ட சரபோஜி மன்ன ரின் கையெழுத்தோடு கூடிய இந்த திருடப் பட்ட பைபிளானது கிங்ஸ் கலெக்சன் என்ற லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் பல்வேறு புலன் விசாரணையில் மேற்படி பைபிள் சரஸ்வதி மகால் நூலகம் அருங் காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்பக்கொண்டு வருவதற்கான அனை த்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இது எவ்வாறு, யார் மூலம் அங்கு சென்றது என்பது பற்றிய விசார ணையும் நடந்துவருகிறது. இச்சிறப்பான பணியினைச் செய்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் திருச்சி சரக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப்படையிரை, காவல் துறைதலைமை இயக்குநர், முனைவர். செ.சைலேந்திர பாபு மற்றும் காவல் துறை இயக்குநர், சிலை திருட்டு தடுப்பு பிரிவு, முனைவர். கி. ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.

;